5.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை நாயக்கர் காலத் தமிழ் குறித்துப் பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

நாயக்கர் காலத் தமிழில் வடமொழிச் செல்வாக்கால் உண்டான பல்வேறு ஒலி மாற்றங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
தமிழ்மொழியில் உரைநடையின் தாக்கத்தாலும் பேச்சுமொழியின் செல்வாக்காலும் இலக்கண அமைப்புகளில் ஏற்பட்ட ஏராளமான மாற்றங்களை உணர முடிந்தது.
நாயக்கர் காலத் தமிழ் வரிவடிவில் வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தம் மிக முக்கியமானது என்பது புலனாகிறது.
தமிழ்மொழியில் எழுந்த இலக்கிய இலக்கணங்கள், எளிய நாட்டுப்புற இலக்கிய வகைகள் ஆகிய இவையனைத்தும் நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த மொழி மாற்றங்களை அறிந்து கொள்ளும் ஆதாரங்களாக விளங்குவதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்!
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
இடப்பொருள் வேற்றுமையின் சொல்லுருபுகள் யாவை?
விடை
2.
நாயக்கர் காலத் தன்மை ஒருமை விகுதிகள் யாவை?
விடை
3.
துணை வினைகள் இரண்டினைக் கூறிச் சான்றுகள் தருக.
விடை
4.
நாயக்கர் காலத்தில் பேச்சு மொழிக்கு இலக்கணம் எழுதிய இருவர் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை