3தன் மதிப்பீடு : விடைகள் - I

3. நிலம் பெயர்ந்தாலும் அவர் சொல் தவற மாட்டார் - இது யார் பேச்சு? பேச்சின் சூழ்நிலையைக் குறிப்பிடுக.

மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார் பாடலின் தலைவி இவ்வாறு பேசுகிறாள். தலைவன் வருவதாகக் குறித்த பருவம் வந்துவிட்டது. ஆனால் தலைவன் வரவில்லை. தலைவி, பருவம் தான் முந்தி வந்துவிட்டது; என் தலைவர் தாம் சொன்ன சொல் தவறமாட்டார் எனத் தன் தலைவன் மீது தனக்கிருக்கும் நம்பிக்கையை அழுத்தமாகச் சொல்கிறாள்.

முன்