தன் மதிப்பீடு : விடைகள் - I

4. செறிப்பறிவுறுத்தல், வரைவுகடாதல் எனும் துறைகளை விளக்குக.

செறிப்பறிவுறுத்தல் தலைவி வீட்டைவிட்டு வெளியே போகமுடியாதபடி அவள் தாயினால் தடுத்து வைக்கப்படுவது இற்செறித்தல் ஆகும். இந்த உண்மையைத் தலைவனுக்குத் தெரிவித்துத் தலைவியை விரைந்து திருமணம் செய்து கொள்ளுமாறு மறைமுகமாகத் தூண்டுவது செறிப்பறிவுறுத்தல் ஆகும்.

வரைவுகடாதல்

வரைவு = திருமணம், கடாதல் = வேண்டுதல், திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுதல்.