2.8 தொகுப்புரை

     இப்பாடத்தில் கலிப்பா,வஞ்சிப்பா,மருட்பா ஆகிய மூவகைப் பாக்களின் இலக்கணம், அவற்றின் வகைகள் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகளுடன் தெளிவாக அறிந்து கொண்டீர்கள். கலிப்பா உறுப்புகளின் அமைப்பைக் கொண்டும், வஞ்சிப்பா அடிகளின் தன்மை கொண்டும், மருட்பா பாடலின் பொருள் கொண்டும் வகைப்படுத்தப் படுவதைத் தெரிந்து கொண்டீர்கள்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - Il
1.
வஞ்சிப்பாவில் பெரும்பாலும் வரும் சீர்கள் யாவை?
2.
வஞ்சிப்பா     வகைப்படுத்தப்படுவதன் அடிப்படை யாது?  
3.
வஞ்சிப்பா எவ்வாறு முடிவுறும்?
4.
மருட்பாவின் பெயர்க்காரணம் கூறுக
5.
மருட்பாவில் அடி எண்ணிக்கை எவ்வாறு அமையும்?
6.
மருட்பாவின் வகைகளைக் கூறுக.
7.
புறநிலை வாழ்த்து என்றால் என்ன?
8.
வாயுறை என்பதன் பொருள் என்ன?
9.
‘வாயுறை வாழ்த்து’ - விளக்குக.
10.
‘செவியறிவுறூஉ ‘- விளக்குக.