2.4 தொகுப்புரை

புதினத்தின் அமைப்பு முறை குறித்து புதினம் ஓர் அறிமுகம் என்ற முந்தைய பாடத்தில் படித்தீர்கள். இப்பாடத்தில் தமிழ்ப் புதினத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து அறிந்து கொண்டீர்கள்.

தமிழ் மொழியின் புதின வரலாறு மூன்று காலக் கட்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலப் புதின ஆசிரியர்கள், துப்பறியும் புதின ஆசிரியர்கள், சமுதாயப் புதின ஆசிரியர்கள் (வரலாற்று நாவலாசிரியர்கள், விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள், சமுதாயச் சீர்த்திருத்த நாவலாசிரியர்கள், குடும்பச் சிக்கல்களைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள், வட்டார நாவலாசிரியர்கள்) குறித்து இப்பாடம் அறிவித்துள்ளது.

தன் மதிப்பீடு வினாக்கள் - II

1
வரலாற்று நாவலாசிரியர்களில் குறிப்பிடத் தக்கவர்களைக் குறிப்பிடுக.
2

தென்னாட்டுத் தாகூர் என்று போற்றப்படுபவர் யார்?

3

வட்டார நாவல்கள் என்றால் என்ன?