பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி அதிகம் பயிலாதவர். உழைப்பாளர்களையும், தொழிலாளர்களையும் கவிதையின்
பாடு பொருளாக்கியவர்; ஏழை x பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு மாறப் பாடியவர்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்து
கொண்டு எழுதியவர். பொதுவுடைமை விரும்பி; வர்க்க எதிர்ப்பாளர்; பெரியார்
ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாடலில் பாடியவர்; மூட நம்பிக்கைகளைச்
சாடியவர்; சாதி ஏற்றத்தாழ்வு கூடாது எனப் பாடியவர். திரைப்படத்தை தம்முடைய கருத்துக்களைச் சொல்ல
ஊடகமாகப் பயன்படுத்தியவர்; நல்ல இலக்கியப்படைப்பாளர். இக்கருத்துகளை இப்பாடத்தின்
மூலம் அறிந்துகொள்ளலாம் .
|