|    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
        விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி அதிகம் பயிலாதவர்.  உழைப்பாளர்களையும், தொழிலாளர்களையும் கவிதையின் 
        பாடு பொருளாக்கியவர்; ஏழை x பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு மாறப் பாடியவர். 
        விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்து 
        கொண்டு எழுதியவர்.  பொதுவுடைமை விரும்பி; வர்க்க எதிர்ப்பாளர்; பெரியார் 
        ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாடலில் பாடியவர்; மூட நம்பிக்கைகளைச் 
        சாடியவர்; சாதி ஏற்றத்தாழ்வு கூடாது எனப் பாடியவர்.  திரைப்படத்தை தம்முடைய கருத்துக்களைச் சொல்ல 
        ஊடகமாகப் பயன்படுத்தியவர்; நல்ல இலக்கியப்படைப்பாளர். இக்கருத்துகளை இப்பாடத்தின் 
        மூலம் அறிந்துகொள்ளலாம் .  
         
      |