“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடிய பாரதிதாசனின் கவிதைகளில் காணப்படும்
புதிய சிந்தனைகள் படிப்பவரைச் சிந்திக்க வைப்பவை. புரட்சிக் கவிஞரல்லவா? உள்ளத்தில்
பொங்கியெழும் தமிழ்ப்பற்று சீரிய கவிதை படைக்கக் காரணமாயிற்று எனலாம். அதிலும்
பலவிதமான சந்தங்களைக் கையாண்டு சிந்துக்குத் தந்தையாக விளங்குவதைப் பாவேந்தரின்
பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.
|