கோப்பெருந்தேவி கண்ட கனவில் பாண்டிய மன்னனின் வெண்கொற்றக்
குடையும் செங்கோலும் சரிந்து விழுந்தன; அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட
ஆராய்ச்சி மணி இடைவிடாது ஒலித்தது; அப்போது எட்டுத் திசைகளும் அதிர்ந்தன;
இரவு நேரத்தில் வானவில் தோன்றியது; பகற்பொழுதில் விண்மீன்கள் மிக்க ஒளியுடன்
பூமியில் விழுந்தன. இத்தகைய தீய காட்சிகளால் வரக்கூடிய துன்பம் ஒன்று
உண்டு என்பதை உணர்ந்து கோப்பெருந்தேவி உள்ளம் நடுங்கியது. இப்பகுதியில்
பாண்டிய மன்னன் வீழ்ச்சி அடையப் போவது தேவி கண்ட கனவின் மூலம் குறிப்பாக
உணர்த்தப்பட்டது.
|