2.5 தொகுப்புரை

தமிழ் இலக்கியத்தில் தொடர்நிலைச் செய்யுளாலான முதல் பெருங்காப்பியமாக விளங்குவது சிலப்பதிகாரம் ஆகும். இக்காப்பியத்தின் ஒரு காதையான வழக்குரை காதை என்ற இந்தப் பாடப் பகுதியில் கோவலன் கண்ணகி வாழ்க்கை வரலாறு மூலம் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும்; பாண்டிய மன்னன் ஆராயாது செய்த தவறே அவனது உயிருக்குக் கூற்றாய் முடிந்தது என்பதன் மூலம் அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளன.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. வழக்குரை காதை அமைப்பு முறை என்ன? [விடை]
2. கோப்பெருந் தேவியின் கனவு குறித்து எழுதுக. [விடை]
3. வாயில் காவலன் கண்ணகியை எவ்வாறு சித்திரிக்கின்றான்? [விடை]
4. கண்ணகி கூறிய சான்று என்ன? [விடை]
5. பாண்டியன் எவ்வாறு நீதியை நிலை நாட்டினான்? [விடை]