சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகும். இளங்கோவும்
சாத்தனாரும் செந்தமிழால் கூடிய நட்பினர். அவர்கள் செய்த சிலம்பும், மணிமேகலையும்
இரண்டு தனிக் காப்பியங்கள் ஆகாமல், பொருள் நிலையிலும், கதை நிலையிலும்
ஒன்றுடன் ஒன்று ஊடுருவி ஒன்றி நிற்பதால் அவற்றை இரட்டைக் காப்பியம் என்று
வழங்குவர்.
|