|
இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள
நெய்தல் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது.
நெய்தல் திணைப் பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் ஆகியவற்றை இப்பாடம் விவரிக்கிறது. நெய்தல்
நில மக்களுக்கு உரிய வாழ்க்கை ஒழுக்கங்கள் முதலிய
சிறப்புகளை இப்பாடம் விளக்குகிறது. கற்பனை, சொல்லாட்சி,
உவமை, உள்ளுறை முதலியவை நெய்தல் திணைப் பாடல்களில்
அமைந்துள்ள முறையினையும் இப்பாடம் விளக்குகிறது. |