தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(5) | ஆசிரியத் தாழிசையின் இலக்கணம் கூறுக. |
|
மூன்று அடியாகத் தம்முள் அளவொத்து வரும். ஒருபொருள் மேல் மூன்று அடுக்கி வரும். அதாவது ஒரே பொருளைப் பற்றி மூன்று பாடல்கள் வரும். அவற்றில் வந்த சொற்களே மீண்டும் வந்து பாட்டின் அமைப்பு ஒரே மாதிரி இருக்கும். இவ்வாறு மூன்றடுக்கி வருவதை ஒத்தாழிசை என்பர். தனியே வந்தாலும் வரும். |