3.2 நாட்டுப்புற இலக்கியம் | ||||||||||||||||
"நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்" என்கிறார் முனைவர் சு.சக்திவேல் (நாட்டுப்புற இயல் ஆய்வு : பக்கம் : 22). எனவே நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது. நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமைப்பாட்டிற்குப் பல வகையினைக் காண முடியும். அவை, 1) நாட்டுப்புறப் பாடல்கள் 2) நாட்டுப்புறக் கதைகள் 3) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் 4) நாட்டுப்புறப் பழமொழிகள் 5) விடுகதைகள் 6) புராணங்கள் முதலியனவாகும். இனி இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். |
||||||||||||||||
3.2.1 நாட்டுப்புறப் பாடல்கள் | ||||||||||||||||
நாட்டுப்புறப் பாடல்கள் முன்னைப் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குகின்றன. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை, வாயில் பிறந்து, செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. இப்பாடல்கள் என்று பிறந்தவை, எவரால் பாடப்பெற்றவை என்று உறுதியாக அறுதியிட்டுச் சொல்ல முடியாத பெருமையினைக் கொண்டவை. இப்பாடல்கள் எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று எதுகை, மோனை, இயைபு, இரட்டைக் கிளவி என்ற யாப்பிலக்கணத்தின் கட்டுக் கோப்பில் அமைந்துள்ளன.
நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும்
சூழல், தாலாட்டுப் பாடல்கள் தாலாட்டுப் பாடல் என்பது தாய்மை
உணர்வின் 1) குழந்தை பற்றியன. குழந்தைப் பாட்டுகள்
குழந்தை உள்ளத்தைப் 1) குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள். என்றும் பிரித்துப் பார்க்கலாம். காதல் பாடல்கள் காதல் பாடல்களை இருவகையாகப் பிரிக்கலாம். தொழில் பாடல்கள் மனிதர்கள் கூடித் தொழில்
செய்யும்போது மனிதன் தன் மகிழ்ச்சியினை ஆடியும் பாடியும் பலரோடு சமூகத்திலுள்ள பலரும் இணைந்து
குழுவாகப் பலரும் கலந்தாடும் கும்மி, கோலாட்டம்
போன்ற ஆதி காலத்தில் மக்கள் இயற்கையோடு
இயைந்த 1) இயற்கை வழிபாட்டுப் பாடல்கள். சான்று : சந்திரரே
சூரியரே இப்பாடலில் தொன்று தொட்டு வரும்
இயற்கை இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் ஒரே பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட தன்மை இருப்பின் |
||||||||||||||||
3.2.2 நாட்டுப்புறக் கதைகள் | ||||||||||||||||
நாட்டுப்புற மக்களிடையே கதை கூறுவது என்பது பொதுவான பண்பாகும். மக்கள் தங்களது வாழ்வியல் நீதிகளுக்காகவும், பொழுது போக்கிற்காகவும் கதைகளை உரைத்தனர். இன்றளவும் உரைத்து வருகின்றனர். நாளையும் கதையினைக் கூறுவார்கள். ஏனென்றால் கதையினைக் கூறுபவரும், கதையினைக் கேட்பவரும் அந்தந்தக் கதைகளோடு தங்களையும் இணைத்துக் கதை கேட்கின்றனர்.
முனைவர் சு. சக்திவேல் நாட்டுப்புறக்
கதைகளை 1) மனிதக் கதைகள் இக்கதைகளின் முக்கிய நோக்கம்
மக்களுக்கு |
||||||||||||||||
3.2.3 நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் | ||||||||||||||||
தனிமனித வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை - பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் - கதையினைப் போன்று அதே சமயம் பாடலாகப் பாடுவது கதைப் பாடலாகும். காப்பியத்தில் தன்னிகரில்லாத் தலைவனின் வளப்பம் மிகுந்த செயல்பாடுகள் எழுதப்படுகின்றன அல்லவா? அதைப் போல நாட்டுப்புறக் கதைப்பாடலில் கதைத் தலைவனின் வீர தீரச் செயல்கள் பாடப்படும். கதைப் பாடல்கள் வரலாறுகள் அல்ல. அவை வீரக் காவியங்கள், மனிதப் பண்பின் உயர்ந்த அம்சங்களைப் போற்றுபவை என்கிறார் நா. வானமாமலை (ஐவர் ராசாக்கள் கதை. ப.53). இவை கதைப்பாடல்களின் இயல்புகள் என்றே கூறலாம்.
கதைப் பாடலில் கீழ்க்காணும் முக்கியக்
கூறுகள் 1) கதையில் நிகழ்ச்சிப் போக்கு உண்டு. (Action) கதைப் பாடலின் அமைப்பில் நான்கு முக்கியப் 1) காப்பு அல்லது வழிபாடு. என்பவையாகும். சான்று : கதைப் பாடல்கள் 1) முத்துப்பட்டன் கதை முனைவர் சு. சக்திவேல் கதைப் பாடல்களை மூன்றாக 1) புராண, இதிகாச தெய்வீகக் கதைப் பாடல்கள் |
||||||||||||||||
3.2.4 நாட்டுப்புறப் பழமொழிகள் | ||||||||||||||||
பழமொழி என்ற சொல்லே மிகப் பழமையானவற்றை உணர்த்துவதாகும். பலரது அறிவையும் ஒருவரது நுண்ணுணர்வையும் அதிலிருந்து பெறகின்றன. அறிவின் சுருக்கமே பழமொழி எனலாம். பழமொழிகள் மக்களது வாழ்வுடன் வாழ்வாகப் பின்னிப் பிணைந்துள்ளன. மக்களின் வாழ்வில் நாளும் பழக்கத்தில் உள்ள மொழி, எதுகை மோனையுடன் ஒரு கருத்தினைக் கூறுதல், விளக்கம் செய்யும் வகையில் எடுத்துக் கூறுதல் ஆகியவற்றைக் கொண்டதே பழமொழியாகும். இவை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் மிக்கவைகளாகும்.
1) பழமொழியின் முக்கிய இயல்பு, சுருக்கம்,
தெளிவு, முனைவர் சு. சக்திவேல்
தமிழ்ப் பழமொழிகளை 1) அளவு அடிப்படை (Size Basis) |
||||||||||||||||
3.2.5 விடுகதைகள் | ||||||||||||||||
விடுகதை என்பது ஏதாவது ஒரு கருத்தைத் தன்னிடம் மறைத்துக் கொண்டு கூறுவது. இதனை அறிவுத்திறத்தோடு ஆராய்ச்சி செய்யும் பொழுது, குறைந்த பட்சம் சிந்தனை செய்யும் பொழுதுதான் புலப்படும். மேலும் ‘விடுகதை’ என்ற நாட்டுப்புற வழக்காற்றில் ஈடுபாடும் விருப்பும் உடையவர்களால் விடுகதையிலுள்ள ‘புதிருக்கு’ (புரியாத நிலையிலுள்ளது) விடையினைக் கூறமுடியும். இவ்வாறு விடுகதை என்பது, 1) அறிவு ஊட்டும் செயல் 2) சிந்தனையைத் தூண்டுதல் 3) பயனுள்ள பொழுது போக்கு என்ற வகையில் அமைந்து மக்களின் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.
விடுகதைகளை, பயன்பாட்டு அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கின்றார் டாக்டர் ச. வே. சுப்ரமணியம் அவர்கள். அவை, 1) விளக்க விடுகதைகள் (Descriptive Riddles) 2) நகைப்பு விடுகதைகள் (Witty question Riddles) 3) கொண்டாட்ட விடுகதைகள் (Ritualistic Riddles) 4) பொழுதுபோக்கு விடுகதைகள் (Recreative Riddles) விடுகதையை அமைப்பியல் ஆய்வின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தலாம். அவை, 1) உருவகமில்லாதது (Literal) சான்று : ‘சிவப்புச் சட்டிக்குக் கறுப்பு மூடி’ - என்பது 2) உருவகமுடையது. சான்று : ‘செத்துக் காய்ந்த மாடு இவ்வாறு விடுகதைகளும் பழமொழிகளும்
மக்களின்
|
||||||||||||||||
3.2.6 புராணங்கள் | ||||||||||||||||
புராணக் கதைகள் மனித மனத்தின் அடித்தளத்தில் உள்ள எண்ணங்களை மையமாகக் கொண்டவை. அத்தகைய புராணக்கதைகள் அன்று முதல் இன்றுவரை வாழ்ந்து வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தில் மனித வாழ்வில் அனுபவித்த முரண்பாடுகள், விந்தைகள், சிக்கல்கள் ஆகியவற்றுக்குத் தீர்வாகப் புராணக்கதைகள் இருந்துள்ளன. சடங்குகள் தான் புராணங்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்துள்ளன. சமயத்தின் ஆழ்ந்த நோக்கு, அடிப்படைக் கருத்துகள் புராணங்களில் தோய்ந்து கிடக்கின்றன. புராணங்களின் வகைகள் தமிழிலுள்ள புராணங்களை மக்களிடையேயுள்ள, 1) வாய்மொழிப் புராணங்கள் (Oral Puranas) என்று பகுத்து ஆராயலாம். |
||||||||||||||||
|