தன்மதிப்பீடு : விடைகள் - II

(3) அக்கர சுதகம் - சித்திரகவியை விளக்குக.


ஒரு செய்யுளில்     பல பொருள்கள் கூறப்
பெற்றிருப்பதாகக் கொள்வோம். அதனைப் பெறப்
படிப்படியாக ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக்
குறைத்துப் பொருள்களைப் பெறுவது இவ்வகைச்
சித்திரகவியாகும். (அக்கரம் = அட்சரம் ; சுதகம் =
நீக்கம்)

எடுத்துக்காட்டு :

(1) இலைகளுள் சிறந்தது = தலைவாழை
(2) தலைவரை விளிப்பது = தலைவா
(3) உறுப்பினுள் சிறந்தது = தலை

முன்