உரிமையுரை

எழுசீர் ஆசிரிய விருத்தம்



கண்டவர் வியக்கும் கவினுறு வடிவும்
      கலைதெரி புலமையும் சீர்சால்
தண்டமிழ் மொழியில் ஆர்வமும் அதனைத்
       தழைத்திடச் செய்தலின் விருப்பும்
கொண்டநற் பெரியோய்! சரவண பவானந்
       தன்னெனும் கோதிலாய்! கருத்தின்
எண்டகு மிந்நூற் பதிப்பினை யீந்தேன்
       ஏன்றருள் உரிமையா இனிதே.

மே.வீ.வே.