ஆயினும், நன்னூலுக்கு முதன் முதலிற் செய்யப்பெற்றதும், இலக்கண விளக்கவுரை,
மேற்கூறிய
விருத்தியுரை முதலியவற்றிற்கு ஆதாரமாகவுள்ளதுமான இந்த மயிலைநாதருரை
சில நூற்றாண்டுகளாகப்
படிப்பாரும் படிப்பிப்பாருமின்றிப் பெயர் வழக்கமுமற்றுக்
கிடந்தமையாலும், சிலசில
பகுதிகள் பிற்காலத்தவர்களால் மறுக்கப்பட்டிருப்பினும்
தமிழ்நாட்டின் பழைய நிலைமையையும்
அக்காலத்துப் புலவர்களுடைய கோட்பாடுகளையும்
இவைபோன்ற அரிய பலவற்றையும் தெரிவித்தலாலும்
இதனைப் பதிப்பிக்கத் துணிந்தேன்.
இவ்வுரையைப் பெரும்பாலும் உபயோகித்துக்கொண்டோர் இதன் பெருமையைத்
தெரிவியாவிடினும்
இதன் கருத்துக்களை மறுக்குமிடங்களுள் ஒன்றிலேனும்
இவ்வுரையாசிரியர் பெயரை |