xxii |
நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும் |
|
|
இவர் காட்டும் வசனமாகிய மேற்கோள்களுள்,
சில பழைய செய்யுட்களின்
உறுப்புக்களாகவும், சில அவற்றின் உரைநடைகளாகவும்,
சில மோனை எதுகைத்
தொடைகளமைந்த கட்டுரைகளாகவும், சில ஒன்றன் பரியாயப் பெயர்களாகவும்
காணப்படுகின்றன; |
(பழைய செய்யுட்களின் உறுப்புக்கள்) |
1. ஆடாவடகு (பக். 122) - ‘‘ஆடாவடகினுளுங்காணேன்’’ (திணைமாலை. 4.)
2. தீத்தீண்டுகையார் (பக். 122) - ‘‘தீத்தீண்டுகையார் தெரி வித்தல்காண்’’
(திணைமாலை 4.)
3. இதனை, இதனால் (பக். 70) - ‘‘இதனை யிதனாலிவன் முடிக்கும்’’ (குறள் 517.)
4. அமரீர், அசுரீர் (பக். 156) - ‘‘அமரீரசுரீரழனாகரையீர்’’ (யா - வி. சூ.
53 -
உரை, மேற்.)
|
(பழைய செய்யுட்களின் உரை நடை) |
1. தச்சனால் இயற்றப்பட்டவையம் (பக். 147)
- ‘‘தச்சன் செய்த சிறுமா வையம்’’
(குறுந்-61.)
2. குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர் (பக். 221) - ‘‘நேரிழை மகளி
ருணங்குணாக் கவருங், கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை’’ (பட். 22-3.)
3. குறுங்கானம்போப (பக். 181) - (சிறுபஞ்ச. 92, உரை.)
4. தைந்நீராடுப (பக். 181) - ‘‘தவத்தைந் நீராடுதல்’’ (பரி. 11.)
5. எறும்பு முட்டைகொண்டு திட்டை யேறின் மழை பெய்தது (பக். 209) - ‘‘பொய்யா
வெழிலி பெய்விடநோக்கி, முட்டை கொண்டு வற்புலஞ்சேருஞ், சிறுநுண்ணெறும்பின்
சில்லொழுக்கு’ (புறநா. 173.)
|
(மோனை எதுகைத் தொடைகளமைந்த கட்டுரை.) |
1. அடை, ஆடை; நரை, நாரை; முளை, மூளை: (பக். 36)
2. பைதல், பொய்தல் (பக். 36.) |
|