| 30 | ஙஞண நமன வயலள வாய்தங் குறிலிணை குறிற்கீழ் மொழியிடை யிறுதியி னளபெழு மவற்றோ டாயுங் காலே.
| 92 |
| 21 | கசதப வொழித்த வீரேழன் கூட்ட மெய்மயக் குடனிலை ரழவொழித் தீரெட் டாகு முயிர்மெய் மயக்கள வின்றவை தேருங் காலை மொழியிடைச் சிவணும்.
| 110 |
| 32 | ஙம்முன் கவ்வும் வம்முன் யவ்வு ஞநமுன் னினமும் யகரமும் டறமுன் கசபவும் ணனமுன் இனமுங் கசஞப மயவவு மம்முன் பயவவும் யரழமுன் மொழிமுதன் மெய்யும் லளமுன் கசப வயவு நின்று மயங்கு மென்ப.
| 111-117 |
| 36 | அம்மு னிகரம் யகர மென்றிவை யெய்தி னையொத் திசைக்கு மவ்வோ டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன விகர யகர மிறுதி விரவும் புகரின் றுணர்ந்தோர் வரைந்தனர் போற்றல்.
| 125 |
| 37 | நெட்டுயிர் காரமு மையௌக் கானு மிருமைக் குறிலொற் றிவற்றொடு கரமுமா மின்னசா ரியைபெறூஉ மெவ்வழி யானு மெய்யி னியக்க மகரமொடு சிவணும்.
| 126 |
| 42 | பகுதி விகுதி யிடைநிலை சாரியை சந்தி விகார மாறினு மேற்பவை முன்னிப் புணர்த்தது முடித்தனர் கொளலே.
| 133 |
| 47 | கடதற வொற்றின் னைம்பான் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை.
| 142 |