| 30 | னகர விறுதி யஃறிணைப் பெயருண் மகரமொடு மயங்கி வருநவு முளவே.
|
| 34 | லளமெய் திரிந்த னணவொடு மகார மீரொற் றாகுஞ் செய்யு ளுள்ளே.
|
| 35 | தம்மர பிசைப்பின் முதலீ றிடைநிலை யம்மர பில்லவு மாமென மொழிப.
|
| 38 | எழுத்தே தனித்து மிணைந்துந் தொடர்ந்தும் பதமாம் பொருடரி னதுபகாப் பதம்பகு பதமென வாயிரு பகுதித் தென்ப.
|
| 40 | பகாஅப் பதம்பகாஅப் பண்பிற் பயின்று பெயர்வினை யிடையுரி யெனநால் வகைத்தே.
|
| 41 | பகுபதம் பகுக்கும் பண்பிற் றாகி வினையே வினைப்பெய ரெனவிரு பாற்றே.
|
| 43 | நடவா மடிசீ விடுகூ வேவை நெப்போ வௌவுரி ஞுண்பொருந் திருந்தின் தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென் றின்னவை முதல வெல்லா வினையுந் தெரிநிலை வினையின் முதனிலை யாகும்.
|
| 44 | முன்ன ரோதிய முதனிலை யிறுதியின் விப்பி யென்பவற் றொப்பது தனிவரி னேவல் வினைமுதற் றெரிநிலை வினையின் மேவரு பகுதி யாமென மொழிப.
|
| 45 | பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலே குறிப்பு வினையி னெறிப்படு முதனிலை
|
| 46 | அன்னா னள்ளா ளர்ரார் பம்மார் அஆ குடுதுறு என்னே னல்லோ டம்மா மெம்மே மோமொ டும்மூர் கடதற ஐயா யிம்மி னிர்ஈர் கயர வாலேல் காணும் பிறவும் வினையின் விகுதி பெயரினும் சிலவே. |