LX

50 குடுதுறு வென்னுங் குன்றிய லுகரமொ
டும்மூர் கடதற விறுதியும் பம்மார்
மின்னெ னீறும் வியங்கோட் பகுதியு
மேவலு மறையு மென்பன வெதிர்வுஞ்
செய்யுநிகழ் பெதிர்வு மெய்பெறத் தரூஉம்
இடைநிலை யேலா வென்மனார் புலவர்.

51 இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலிற்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைக்குறிப் பிடைநிலை யென்னல் வேண்டும்.

52 விளம்பிய விடைநிலை வினைப்பெயர் கண்ணு
மேற்பன கோட லியல்பென மொழிப.

54 ஐம்முத லாறு தழுவுதொடர் வேற்றுமை
செவ்விதி னிலையு மெழுவாய் விளிமுற்
றிடையுரி யெச்சமடுக் குவமை யும்மை
தழுவுதொட ரல்வழிச் சந்தி யென்ப.

56 விகாரமொற் றுயிருயிர்மெய் சாரியை மிகுத
றிரிதல் கெடுத லெனமூ வகைத்தே.

65 குற்றிய லுகரத் திறுதி முன்னு
மற்றென மொழிப யவ்வரி னிகரந்
தெற்றென வரூஉமது முற்றத் தோன்றாது.

72 விளிநிலைக் கிளவியு மவற்றோ ரன்ன

73 உயிரும் புள்ளியு மிறுதி யாகிய
முன்னிலை வினையே யேவ லென்றிவை
யியல்பா குநவு முறழா குநவுமென்
றாயீ ரியல வல்லெழுத்து வரினே.

83 மெல்லெழுத்து மிகுநவும் வல்லெழுத்து மிகுநவு
மம்மிடை வருநவு முறழ்ச்சி யெய்துநவு
மென்றொருநால் வகைய மரப்பெய ரன்னவை
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.