முகப்பு

 

தொடக்கம்


பாட்டியல் - பிற்சேர்க்கை 3  

479


கடைநிலை, கையறுநிலை, தசாங்கப்பத்து

 

     ‘தவமுனிவர் சேணிடை வருதலால் பிறர்வருத்

              தம் தீர வாயில்காப்போய்

 

          தலைவற்கு என்வரவு இசைஎனக் கடைக்கண் நின்று

              சாற்று எனச்சொல் கடைநிலை74 ;

 

     அவனியில் கணவனோடு இல்லாள் கழிந்துழி

              அவர் சுடப்பட்ட அழிவின்

 

          அப்பொருள்எலாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தானும்

              அப்போது இறந்தேபடா

 

     தெவர்தாம் ஒழிந்த ஆயத்தார்களும் பரி

              சில் பெறும் விறலியோரும்

 

          செயல்தனிப்படர் உழந்திடு செயலின் அறுநிலை

              செப்பிடும் கையறுநிலை75 ;

 

     பவனம்உறும் அரசனுக்கு ஒத்திடு தசாங்கமும்

              பாடு நேரிசைவெள்ளையால்

 

          பத்துச்செய்யுள் கூறலதுவே தசாங்கம் உறு

             பத்து76 என உரைப்பார்களே.    

 25

 

 

 பதிகம், குழமகன், மங்கலவள்ளை, நாற்பது

 

     ஒருபொருள் தனைக்குறித்துப் பகர்செய்யுள் பதிகம்77 ;

              ஓதல் கலிவெண்பாவினால்

 

          உயர்பெண்கள் தம்கையில் கண்ட இளமைத்தன்மை

              உடைய குழமகனைப் புகழ்ந்து



முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்