91.
வாயுறை வாழ்த்து :
|
வேம்பும் கடுவும் போல்வனவாகிய வெஞ்சொற்கள்
முன்னர்த்தாங்காக்காவாயினும் பின்னர்ப் பெரிதும் பயன்தரும் என
மெய்ப்பொருளு
வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியுமாகக் கூறுவது.
|
92. விருத்த இலக்கணம் :
|
வில் வாள் வேல் செங்கோல் யானை குதிரை நாடு ஊர் குடை
இவ்வொன்பதனையும் பப்பத்து
விருத்தத்தால் ஒன்பது வகையுறப் பாடுவது.
|
93. விளக்கு நிலை
|
வேலும் வேற்றலையும் விலங்காது ஓங்கியவாறு போலக்
கோலோடுவிளக்கும் ஒன்றுபட்டு ஓங்குமாறு
ஓங்குவதாகக் கூறுவது
|
94. வீரவெட்சிமாலை :
|
சுத்த வீரன் மாற்றார் ஊரில் சென்று பசுநிரை கோடற்கு வெட்சிப்பூ
மாலை சூடி அவ்வண்ணம்
போய் நிரை கவர்ந்துவரில், அவனுக்கு முன்பு
தசாங்கம் வைத்துப்
போய்வந்த வெற்றி பாடுவது.
|
95. வெற்றிக்கரந்தை மஞ்சரி :
|
பகைவர் கொண்ட தம் நிரை மீட்போர் கரந்தைப்பூ மாலை
சூடிப்போய்மீட்பதைக் கூறுவது.
|
96. வேனில்மாலை :
|
வேனிலையும் முதுவேனிலையும் சிறப்பித்துப் பாடுவது.
|
*63-64 |