xx
இவ்வாறே தொகைநிலைத் தொடரில் பொருள் சிறந்து நிற்குமிடத்தைக்
கொண்டு நேமிநாதத்தின் செல்வாக்கைக் காணலாம். தொல்காப்பியர்
|
|
‘முன்மொழி நிலையிலும் பின்மொழி நிலையிலும் இருமொழியலும் ஒருங்குடனிலையலும்
அம்மொழி நிலையாது அன்மொழி நிலையிலும் அந்நான் கென்ப பொருள்நிலை
மரபே. (தொல். சொல். 419)
|
இக்கருத்தைத்தான் குணவீர பண்டிதர்
|
|
முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும் அன்மொழியும் என்று
இவற்றில்லாம்.... (நேமி. 63. 1,2)
|
என்று கூறிச் சென்றார். இந்த வரிகளே
|
|
‘முன்மொழி, பின்மொழி, இருமொழி, அன்மொழியாய்ச் சாற்றல்’ என்று சாமி
காவிராயர்க்கு (சுவாமி. 67,2)
|
வழிகாட்டியாக அமைந்திருக்க வேண்டும். ஏனெனில்
|
|
முன்மொழி, பின்மொழி, பன்மொழி புறமொழி என நான்கிடத்தும்...... (நன். 370)
|
என்ற நன்னூல் வரிகளைப் பார்த்தால் உண்மையைத் தெற்றெனப் புரிந்து கொள்ளலாம்.
|
அன்மொழி விளக்கத்திலும் நேமிநாதமே சுவாமிநாதத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளதைக் காணலாம்.
|
|
ஏனைத் தொகைச் சொற்கள் ஐந்தின் இறுதிக்கண்
ஆனபெயர் தோன்றின் அன்மொழியாம்
|
என்ற நேமிநாத வரிகளே (62. 1,2)
|
|
சாற்று அன்மொழி ஐந்தொகை ஈற்று
அங்ஙன வேறு ஒருபேர்தனைக் காட்டும்
|
என்று சுவாமிநாதமாக மாறியுள்ளது (66 . 14)
இங்ஙனம் சொல்லளவில் மட்டும் நேமிநாதத்தில் சாமிகவிராயர் ஏன்
ஈடுபாடு கொண்டார் என்பது மேலும் ஆராய்தற்குரியது.
|