xxxi

இலக்கணக் கொத்து ஆதாரமாக அமைந்த சூத்திரங்களின் முழுப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

       சுவாமிநாதம்  இலக்கணக் கொத்து
எழுத்து:  27  111, 113
சொல்: 40.3 20
   41.2 16
   41.3, 4      25
  45 22, 45, 47, 46, 50, 23
  47  68, 69, 66
  48  67
  51  71, 72, 85
  53.4 86
  65.4
79

இலக்கணக் கொத்து கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் பொதுமைப்படுத்தியும் தொகுத்தும் கூறிய சாமிகவிராயரின் சிறப்பு தனியே
சுட்டிக் காட்டுவதற்கு உரியது.

இலக்கணக்கொத்து முதல் வேற்றுமை உருபை விரித்துச் சொல்லும்போது

  ... ... ... ஆயவன், 
ஆனவன், ஆவான், ஆகின்றவன் முதல்
 ஐம்பாற் சொல்லும்

என்று இ. கொ. (25.5, 7) கூறியதையே சுவாமிநாதம்  (41.4)  ‘ஆனவன் முதல் ஐம்பாற் மூன்று இட  முக்காலச் சொல்’

என்று பொதுமையாக்கிக் கூறியுள்ளது

எல்லா உருபொடும் செயப்படு பொருள் எழுமே (45)
எல்லா உருபொடும் கொள்வோன் எழுமே 47)