தொடக்கம் |
சிறுபாண்
ஆற்றுப்படை
(ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை |
வேனிற்காலம் | |
மணி மலை ப் பணைத் தோள் மா நில மடந்தை | |
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல, | |
செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று, | |
கொல்கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த | |
புதுப் பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து, | 5 |
கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல் | |
அயில் உருப்பனைய ஆகி, ஐது நடந்து, | |
வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப, | |
வேனில் நின்ற வெம் பத வழி நாள் | |
காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப, | 10 |
பாலை நின்ற பாலை நெடு வழிச் | |
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ | |
அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன் | |
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு, அருளி, | |
நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என, | |
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன் | 15 |
மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய் | |
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ, | |
வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து, | |
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின், | |
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என, | 20 |
மால் வரை ஒழுகிய வாழை: வாழைப் | |
பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி, | |
நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சி, | |
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து, | |
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி, | 25 |
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என, | |
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் | |
இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என, | |
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த | |
முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்; | 30 |
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் | |
நடை மெலிந்து அசைஇய நல் மென் சீறடி | |
கல்லா இளையர் மெல்லத் தைவர, | |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் | |
இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, | 35 |
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை | |
கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க, | |
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ, | |
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப, | |
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல! | 40 |
| |
கொழு மீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க் | |
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை | |
பைங் கறி நிவந்த பலவின் நீழல், | |
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர, | |
விளையா இளங் கள் நாற, மெல்குபு பெயரா, | 45 |
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் | |
குட புலம் காவலர் மருமான் ஒன்னார் | |
வட புல இமயத்து, வாங்கு வில் பொறித்த | |
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன் | |
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே: அதாஅன்று, | 50 |
| |
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து | |
அறை வாய்க் குறுந் துணி அயில் உளி பொருத | |
கை புனை செப்பம் கடைந்த மார்பின், | |
செய் பூங் கண்ணி செவிமுதல் திருத்தி, | |
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த | 55 |
மகாஅர் அன்ன மந்தி, மடவோர் | |
நகாஅர் அன்ன, நளி நீர் முத்தம் | |
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி, | |
தோள் புறம் மறைக்கும், நல் கூர் நுசுப்பின், | |
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற | 60 |
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் | |
தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்; | |
தென் புலம் காவலர் மருமான்; ஒன்னார் | |
மண் மாறு கொண்ட, மாலை வெண் குடை, | |
கண் ஆர் கண்ணி, கடுந் தேர்ச் செழியன்; | 65 |
தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின் | |
மகிழ் நனை, மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று, | |
| |
நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த | |
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை, | |
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் | 70 |
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின், | |
வரு முலை அன்ன வண் முகை உடைந்து, | |
திரு முகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை, | |
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன | |
சேயிதழ் பொதிந்த செம் பொன் கொட்டை, | 75 |
ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து, | |
காமரு தும்பி காமரம் செப்பும் | |
தண் பணை தழீஇய தளரா இருக்கைக் | |
குண புலம் காவலர் மருமான் ஒன்னார் | |
ஓங்கு எயி்ல் கதவம் உருமுச் சுவல் சொறியும் | 80 |
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை, | |
நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன் | |
ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே: அதாஅன்று, | |
ஏழு வள்ளல்களின் சிறப்பு | |
வானம் வாய்த்த வள மலைக் கவா அன் | |
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய | 85 |
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன், | |
பெருங் கல் நாடன், பேகனும்; சுரும்பு உண | |
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச் | |
சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய, | |
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் | 90 |
பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி | |
வால் உளைப் புரவியொடு வையகம், மருள, | |
ஈர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த, | |
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல், | |
கழல் தொடித் தடக் கை, காரியும்; நிழல் திகழ் | 95 |
நீலம், நாகம் நல்கிய, கலிங்கம் | |
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த, | |
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள், | |
ஆர்வ நன் மொழி, ஆயும்; மால் வரைக் | |
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி | 100 |
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த, | |
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல், | |
அரவக் கடல் தானை, அதிகனும்; கரவாது, | |
நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம் | |
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை, | 105 |
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு | |
நளி மலை நாடன், நள்ளியும்; நளி சினை | |
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக் | |
குறும் பொறை, நல் நாடு கோடியர்க்கு ஈந்த, | |
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த | 110 |
ஓரிக் குதிரை, ஓரியும்; என ஆங்கு, | |
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் | |
எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகம், | |
| |
விரி கடல் வேலி வியலகம் விளங்க, | |
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் | 115 |
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் | |
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய | |
பொரு புனல் தரூஉம், போக்கு அரு மரபின், | |
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய | |
நல் மா இலங்கை மன்னருள்ளும், | 120 |
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள், | |
உறு புலித் துப்பின், ஓவியர் பெருமகன் | |
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி, | |
பிடிக் கணம் சிதறும் பெயல் மழைத் தடக் கை, | |
பல் இயக் கோடியர் புரவலன் பேர் இசை | 125 |
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு, | |
| |
தாங்கு அரு மரபின் தன்னும், தந்தை | |
வான் பொரு நெடு வரை வளனும், பாடி, | |
முன் நாள் சென்றனம் ஆக | |
| |
இந் நாள், | |
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை | 130 |
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது, | |
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் | |
காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த, | |
பூழி பூத்த புழல் காளாம்பி: | |
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல், | 135 |
வளைக் கை, கிணை மகள் வள் உகிர்க் குறைத்த | |
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை, | |
மடவோர் காட்சி நாணி, கடை அடைத்து, | |
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் | |
அழி பசி வருத்தம் வீட; பொழி கவுள், | 140 |
தறுகண் பூட்கை, தயங்கு மணி மருங்கின், | |
சிறு கண் யானையொடு பெருந் தேர் எய்தி; | |
யாம் அவண் நின்றும் வருதும். | |
| |
நீயிரும், | |
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் | |
செம்மல் உள்ளமொடு, செல்குவிர்ஆயின், | 145 |
அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும், | |
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும், | |
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும், | |
நெடுங் கால் புன்னை நித்திலம் வைப்பவும், | |
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர, | 150 |
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி, | |
மணி நீர் வைப்பு, மதிலொடு பெயரிய, | |
பனி நீர்ப் படுவின், பட்டினம் படரின் | |
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன | |
வீங்குதிரை கொணர்ந்த விரை மர விறகின் | 155 |
கரும் புகைச் செந் தீ மாட்டி, பெருந் தோள், | |
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து, | |
நுதி வேல் நோக்கின், நுளைமகள் அரித்த | |
பழம் படு தேறல் பரதவர் மடுப்ப, | |
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான், | 160 |
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி, | |
அறல் குழல் பாணி தூங்கியவரொடு, | |
வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்: | |
| |
பைந் நனை அவரை பவழம் கோப்பவும், | |
கரு நனைக் காயாக் கண மயில் அவிழவும், | 165 |
கொழுங் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும், | |
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும், | |
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும், | |
முல்லை சான்ற முல்லை அம் புறவின், | |
விடர் கால் அருவி வியல் மலை மூழ்கிச் | 170 |
சுடர் கால்மாறிய செவ்வி நோக்கி, | |
திறல் வேல் நுதியின் பூத்த கேணி, | |
விறல் வேல் வென்றி, வேலூர் எய்தின் | |
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை | |
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ் சோறு, | 175 |
தேமா மேனிச் சில் வளை ஆயமொடு | |
ஆமான் சூட்டின அமைவரப் பெறுகுவிர். | |
| |
நறும் பூங் கோதை தொடுத்த நாள் சினைக் | |
குறுங் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி, | |
நிலை அருங் குட்டம் நோக்கி, நெடிது இருந்து, | 180 |
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல் | |
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை, | |
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள்போது | |
கொங்கு கவர் நீலச் செங் கண் சேவல் | |
மதி சேர் அரவின் மானத் தோன்றும் | 185 |
மருதம் சான்ற மருதத் தண் பணை, | |
அந்தணர் அருகா, அருங் கடி வியல் நகர், | |
அம் தண் கிடங்கின், அவன் ஆமூர் எய்தின் | |
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் | |
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை, | 190 |
பிடிக் கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத் | |
தொடிக் கை மகடூஉ, மக முறை தடுப்ப, | |
இருங் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த | |
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு, | |
கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர். | 195 |
| |
எரி மறிந்தன்ன நாவின், இலங்கு எயிற்று, | |
கரு மறிக் காதின், கவை அடிப் பேய்மகள் | |
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல, | |
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர், பணைத் தாள், | |
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப, | 200 |
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் | |
சேய்த்தும் அன்று; சிறிது நணியதுவே. | |
| |
பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும், | |
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும், | |
கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன, | 205 |
அடையா வாயில் அவன் அருங் கடை குறுகி | |
| |
| |
செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும், | |
இன் முகம் உடைமையும், இனியன் ஆதலும், | |
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த; | |
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ் சினம் இன்மையும், | 210 |
ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும், | |
வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்த; | |
கருதியது முடித்தலும், காமுறப் படுதலும், | |
ஒரு வழிப் படாமையும், ஓடியது உணர்தலும், | |
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த; | 215 |
அறிவு மடம் படுதலும், அறிவு நன்கு உடைமையும், | |
வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும், | |
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த; | |
பல் மீன் நடுவண் பால் மதி போல, | |
இன் நகை ஆயமொடு இருந்தோற் குறுகி | 220 |
| |
பைங் கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன, | |
அம் கோட்டுச் செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்; | |
மணி நிரைத்தன்ன வனப்பின்; வாய் அமைத்து, | |
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து, | |
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப, | 225 |
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு; தேம் பெய்து, | |
அமிழ்து பொதிந்து இலிற்றும், அடங்கு புரி நரம்பின்; | |
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக் | |
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக, | |
நூல் நெறி மரபின், பண்ணி, 'ஆனாது, | 230 |
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை' எனவும், | |
'இளையோர்க்கு மலர்ந்த மார்பினை' எனவும் | |
'ஏரோர்க்கு நிழன்ற கோலினை' எனவும் | |
'தேரோர்க்கு அழன்ற வேலினை' எனவும் | |
நீ சில மொழியா அளவை | 235 |
| |
மாசு இல், | |
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ, | |
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி, | |
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப் | |
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன், | |
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள் | 240 |
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில், | |
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த | |
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து | |
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி, | |
ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, | 245 |
| |
திறல் சால் வென்றியொடு தெவ்வுப் புலம் அகற்றி, | |
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி, | |
நயவர், பாணர், புன்கண் தீர்த்தபின், | |
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு; | |
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி | 250 |
உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு, | |
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு | |
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு, | |
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ் சினைத் | |
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல, | 255 |
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை, | |
கருந் தொழில் வினைஞர் கைவினை முற்றி, | |
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு; | |
மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள் | |
வாள் முகப் பாண்டில் வலவனொடு; தரீஇ, | 260 |
அன்றே விடுக்கும், அவன் பரிசில் | |
| |
மென் தோள், | |
துகில் அணி அல்குல், துளங்கு இயல் மகளிர் | |
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின், | |
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி, | |
துணி மழை தவழும் துயல் கழை நெடுங் கோட்டு, | 265 |
எறிந்து உரும் இறந்த ஏற்று அருஞ் சென்னி, | |
குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணி, | |
செல் இசை நிலைஇய பண்பின், | |
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே. | |
| |
| |
தனிப் பாடல்கள் | |
அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய் | |
தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண் | |
இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன் | |
செம்மல் சிலை பொருத தோள். | 1 |
நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப் | |
படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி | |
ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன் | |
சூடிய கண்ணி சுடும். | 2 |