| தொடக்கம் |
| சிறுபாண்
ஆற்றுப்படை
(ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேனிற்காலம் | |
| மணி மலை ப் பணைத் தோள் மா நில மடந்தை | |
| அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல, | |
| செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று, | |
| கொல்கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த | |
| புதுப் பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து, | 5 |
| கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல் | |
| அயில் உருப்பனைய ஆகி, ஐது நடந்து, | |
| வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப, | |
| வேனில் நின்ற வெம் பத வழி நாள் | |
| காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப, | 10 |
| பாலை நின்ற பாலை நெடு வழிச் | |
| சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ | |
அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன் | |
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு, அருளி, | |
| நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என, | |
| மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன் | 15 |
| மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய் | |
| உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ, | |
| வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து, | |
| ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின், | |
| சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என, | 20 |
| மால் வரை ஒழுகிய வாழை: வாழைப் | |
| பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி, | |
| நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சி, | |
| களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து, | |
| யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி, | 25 |
| பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என, | |
| வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் | |
| இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என, | |
| குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த | |
| முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்; | 30 |
| மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் | |
| நடை மெலிந்து அசைஇய நல் மென் சீறடி | |
| கல்லா இளையர் மெல்லத் தைவர, | |
| பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் | |
| இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, | 35 |
| நைவளம் பழுநிய நயம் தெரி பாலை | |
| கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க, | |
| இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ, | |
| துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப, | |
| முனிவு இகந்திருந்த முது வாய் இரவல! | 40 |
| |
கொழு மீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க் | |
| கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை | |
| பைங் கறி நிவந்த பலவின் நீழல், | |
| மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர, | |
| விளையா இளங் கள் நாற, மெல்குபு பெயரா, | 45 |
| குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் | |
| குட புலம் காவலர் மருமான் ஒன்னார் | |
| வட புல இமயத்து, வாங்கு வில் பொறித்த | |
| எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன் | |
| வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே: அதாஅன்று, | 50 |
| |
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து | |
| அறை வாய்க் குறுந் துணி அயில் உளி பொருத | |
| கை புனை செப்பம் கடைந்த மார்பின், | |
| செய் பூங் கண்ணி செவிமுதல் திருத்தி, | |
| நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த | 55 |
| மகாஅர் அன்ன மந்தி, மடவோர் | |
| நகாஅர் அன்ன, நளி நீர் முத்தம் | |
| வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி, | |
| தோள் புறம் மறைக்கும், நல் கூர் நுசுப்பின், | |
| உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற | 60 |
| கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் | |
| தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்; | |
| தென் புலம் காவலர் மருமான்; ஒன்னார் | |
| மண் மாறு கொண்ட, மாலை வெண் குடை, | |
| கண் ஆர் கண்ணி, கடுந் தேர்ச் செழியன்; | 65 |
| தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின் | |
| மகிழ் நனை, மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று, | |
| |
நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த | |
| துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை, | |
| ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் | 70 |
| கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின், | |
| வரு முலை அன்ன வண் முகை உடைந்து, | |
| திரு முகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை, | |
| ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன | |
| சேயிதழ் பொதிந்த செம் பொன் கொட்டை, | 75 |
| ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து, | |
| காமரு தும்பி காமரம் செப்பும் | |
| தண் பணை தழீஇய தளரா இருக்கைக் | |
| குண புலம் காவலர் மருமான் ஒன்னார் | |
| ஓங்கு எயி்ல் கதவம் உருமுச் சுவல் சொறியும் | 80 |
| தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை, | |
| நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன் | |
| ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே: அதாஅன்று, | |
ஏழு வள்ளல்களின் சிறப்பு | |
வானம் வாய்த்த வள மலைக் கவா அன் | |
| கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய | 85 |
| அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன், | |
| பெருங் கல் நாடன், பேகனும்; சுரும்பு உண | |
| நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச் | |
| சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய, | |
| பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் | 90 |
| பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி | |
| வால் உளைப் புரவியொடு வையகம், மருள, | |
| ஈர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த, | |
| அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல், | |
| கழல் தொடித் தடக் கை, காரியும்; நிழல் திகழ் | 95 |
| நீலம், நாகம் நல்கிய, கலிங்கம் | |
| ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த, | |
| சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள், | |
| ஆர்வ நன் மொழி, ஆயும்; மால் வரைக் | |
| கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி | 100 |
| அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த, | |
| உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல், | |
| அரவக் கடல் தானை, அதிகனும்; கரவாது, | |
| நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம் | |
| முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை, | 105 |
| துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு | |
| நளி மலை நாடன், நள்ளியும்; நளி சினை | |
| நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக் | |
| குறும் பொறை, நல் நாடு கோடியர்க்கு ஈந்த, | |
| காரிக் குதிரைக் காரியொடு மலைந்த | 110 |
| ஓரிக் குதிரை, ஓரியும்; என ஆங்கு, | |
| எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் | |
| எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகம், | |
| |
விரி கடல் வேலி வியலகம் விளங்க, | |
| ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் | 115 |
| நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் | |
| துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய | |
| பொரு புனல் தரூஉம், போக்கு அரு மரபின், | |
| தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய | |
| நல் மா இலங்கை மன்னருள்ளும், | 120 |
| மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள், | |
| உறு புலித் துப்பின், ஓவியர் பெருமகன் | |
| களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி, | |
| பிடிக் கணம் சிதறும் பெயல் மழைத் தடக் கை, | |
| பல் இயக் கோடியர் புரவலன் பேர் இசை | 125 |
| நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு, | |
| |
தாங்கு அரு மரபின் தன்னும், தந்தை | |
| வான் பொரு நெடு வரை வளனும், பாடி, | |
| முன் நாள் சென்றனம் ஆக | |
| |
இந் நாள், | |
| திறவாக் கண்ண சாய் செவிக் குருளை | 130 |
| கறவாப் பால் முலை கவர்தல் நோனாது, | |
| புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் | |
| காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த, | |
| பூழி பூத்த புழல் காளாம்பி: | |
| ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல், | 135 |
| வளைக் கை, கிணை மகள் வள் உகிர்க் குறைத்த | |
| குப்பை வேளை உப்பு இலி வெந்ததை, | |
| மடவோர் காட்சி நாணி, கடை அடைத்து, | |
| இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் | |
| அழி பசி வருத்தம் வீட; பொழி கவுள், | 140 |
| தறுகண் பூட்கை, தயங்கு மணி மருங்கின், | |
| சிறு கண் யானையொடு பெருந் தேர் எய்தி; | |
| யாம் அவண் நின்றும் வருதும். | |
| |
நீயிரும், | |
| இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் | |
| செம்மல் உள்ளமொடு, செல்குவிர்ஆயின், | 145 |
| அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும், | |
| தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும், | |
| கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும், | |
| நெடுங் கால் புன்னை நித்திலம் வைப்பவும், | |
| கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர, | 150 |
| பாடல் சான்ற நெய்தல் நெடு வழி, | |
| மணி நீர் வைப்பு, மதிலொடு பெயரிய, | |
| பனி நீர்ப் படுவின், பட்டினம் படரின் | |
| ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன | |
| வீங்குதிரை கொணர்ந்த விரை மர விறகின் | 155 |
| கரும் புகைச் செந் தீ மாட்டி, பெருந் தோள், | |
| மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து, | |
| நுதி வேல் நோக்கின், நுளைமகள் அரித்த | |
| பழம் படு தேறல் பரதவர் மடுப்ப, | |
| கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான், | 160 |
| தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி, | |
| அறல் குழல் பாணி தூங்கியவரொடு, | |
| வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்: | |
| |
பைந் நனை அவரை பவழம் கோப்பவும், | |
| கரு நனைக் காயாக் கண மயில் அவிழவும், | 165 |
| கொழுங் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும், | |
| செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும், | |
| கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும், | |
| முல்லை சான்ற முல்லை அம் புறவின், | |
| விடர் கால் அருவி வியல் மலை மூழ்கிச் | 170 |
| சுடர் கால்மாறிய செவ்வி நோக்கி, | |
| திறல் வேல் நுதியின் பூத்த கேணி, | |
| விறல் வேல் வென்றி, வேலூர் எய்தின் | |
| உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை | |
| எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ் சோறு, | 175 |
| தேமா மேனிச் சில் வளை ஆயமொடு | |
| ஆமான் சூட்டின அமைவரப் பெறுகுவிர். | |
| |
நறும் பூங் கோதை தொடுத்த நாள் சினைக் | |
| குறுங் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி, | |
| நிலை அருங் குட்டம் நோக்கி, நெடிது இருந்து, | 180 |
| புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல் | |
| வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை, | |
| முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள்போது | |
| கொங்கு கவர் நீலச் செங் கண் சேவல் | |
| மதி சேர் அரவின் மானத் தோன்றும் | 185 |
| மருதம் சான்ற மருதத் தண் பணை, | |
| அந்தணர் அருகா, அருங் கடி வியல் நகர், | |
| அம் தண் கிடங்கின், அவன் ஆமூர் எய்தின் | |
| வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் | |
| உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை, | 190 |
| பிடிக் கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத் | |
| தொடிக் கை மகடூஉ, மக முறை தடுப்ப, | |
| இருங் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த | |
| அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு, | |
| கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர். | 195 |
| |
எரி மறிந்தன்ன நாவின், இலங்கு எயிற்று, | |
| கரு மறிக் காதின், கவை அடிப் பேய்மகள் | |
| நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல, | |
| பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர், பணைத் தாள், | |
| அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப, | 200 |
| நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் | |
| சேய்த்தும் அன்று; சிறிது நணியதுவே. | |
| |
பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும், | |
| அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும், | |
| கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன, | 205 |
| அடையா வாயில் அவன் அருங் கடை குறுகி | |
| |
| |
செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும், | |
| இன் முகம் உடைமையும், இனியன் ஆதலும், | |
| செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த; | |
| அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ் சினம் இன்மையும், | 210 |
| ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும், | |
| வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்த; | |
| கருதியது முடித்தலும், காமுறப் படுதலும், | |
| ஒரு வழிப் படாமையும், ஓடியது உணர்தலும், | |
| அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த; | 215 |
| அறிவு மடம் படுதலும், அறிவு நன்கு உடைமையும், | |
| வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும், | |
| பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த; | |
| பல் மீன் நடுவண் பால் மதி போல, | |
| இன் நகை ஆயமொடு இருந்தோற் குறுகி | 220 |
| |
பைங் கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன, | |
| அம் கோட்டுச் செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்; | |
| மணி நிரைத்தன்ன வனப்பின்; வாய் அமைத்து, | |
| வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து, | |
| கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப, | 225 |
| புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு; தேம் பெய்து, | |
| அமிழ்து பொதிந்து இலிற்றும், அடங்கு புரி நரம்பின்; | |
| பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக் | |
| கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக, | |
| நூல் நெறி மரபின், பண்ணி, 'ஆனாது, | 230 |
| முதுவோர்க்கு முகிழ்த்த கையினை' எனவும், | |
| 'இளையோர்க்கு மலர்ந்த மார்பினை' எனவும் | |
| 'ஏரோர்க்கு நிழன்ற கோலினை' எனவும் | |
| 'தேரோர்க்கு அழன்ற வேலினை' எனவும் | |
| நீ சில மொழியா அளவை | 235 |
| |
மாசு இல், | |
| காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ, | |
| பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி, | |
| கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப் | |
| பூ விரி கச்சைப் புகழோன் தன்முன், | |
| பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள் | 240 |
| பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில், | |
| வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த | |
| இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து | |
| விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி, | |
| ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, | 245 |
| |
திறல் சால் வென்றியொடு தெவ்வுப் புலம் அகற்றி, | |
| விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி, | |
| நயவர், பாணர், புன்கண் தீர்த்தபின், | |
| வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு; | |
| பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி | 250 |
| உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு, | |
| கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு | |
| ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு, | |
| சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ் சினைத் | |
| ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல, | 255 |
| உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை, | |
| கருந் தொழில் வினைஞர் கைவினை முற்றி, | |
| ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு; | |
| மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள் | |
| வாள் முகப் பாண்டில் வலவனொடு; தரீஇ, | 260 |
| அன்றே விடுக்கும், அவன் பரிசில் | |
| |
மென் தோள், | |
| துகில் அணி அல்குல், துளங்கு இயல் மகளிர் | |
| அகில் உண விரித்த அம் மென் கூந்தலின், | |
| மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி, | |
| துணி மழை தவழும் துயல் கழை நெடுங் கோட்டு, | 265 |
| எறிந்து உரும் இறந்த ஏற்று அருஞ் சென்னி, | |
| குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணி, | |
| செல் இசை நிலைஇய பண்பின், | |
| நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே. | |
| |
| |
தனிப் பாடல்கள் | |
அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய் | |
| தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண் | |
| இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன் | |
| செம்மல் சிலை பொருத தோள். | 1 |
நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப் | |
| படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி | |
| ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன் | |
| சூடிய கண்ணி சுடும். | 2 |