கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல் | |
| இதன் பொருள் |
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் |
|
| விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து, |
|
| திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி, |
|
| நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில், |
|
| மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு, |
5 |
| கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின், |
|
| இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு, |
|
| விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ, |
|
| நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை, |
|
| கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி, |
10 |
| நொடி தரு பாணிய பதலையும், பிறவும், |
|
| கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப, |
|
| நேர் சீர் சுருக்கிக் காய கலப் பையிர் |
|
அவர்கள் கடந்து வந்த மலை வழி
| |
கடுக் கலித்து எழுந்த கண் அகல் சிலம்பில் |
|
| படுத்து வைத்தன்ன பாறை மருங்கின், |
15 |
| எடுத்து நிறுத்தன்ன இட்டு அருஞ் சிறு நெறி, |
|
| தொடுத்த வாளியர், துணை புணர் கானவர், |
|
| இடுக்கண் செய்யாது, இயங்குநர் இயக்கும் |
|
| அடுக்கல் மீமிசை, அருப்பம் பேணாது, |
|
| இடிச் சுர நிவப்பின் இயவுக் கொண்டு ஒழுகி- |
20 |
பேரியாழின் இயல்பு
| |
தொடித் திரிவு அன்ன தொண்டு படு திவவின்; |
|
| கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா, |
|
| குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின், |
|
| அரலை தீர உரீஇ, வரகின் |
|
| குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ, |
25 |
| சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி, |
|
| இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி, |
|
| புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து, |
|
| புதுவது போர்த்த பொன் போல் பச்சை; |
|
| வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் |
30 |
| மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து |
|
| அடங்கு மயிர் ஒழுகிய அவ் வாய் கடுப்ப, |
|
| அகடு சேர்பு பொருந்தி, அளவினில் திரியாது, |
|
| கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி; |
|
| நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை, |
35 |
| களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின், |
|
| வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ் |
|
பாணரும் விறலியரும் சூழ இருந்த
கூத்தர் தலைவனை அழைத்தல்
| |
அமை வரப் பண்ணி, அருள் நெறி திரியாது, | |
| இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப, |
|
| துறை பல முற்றிய பை தீர் பாணரொடு |
40 |
| உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின், |
|
| மதம் தபு ஞமலி நாவின் அன்ன, |
|
| துளங்கு இயல் மெலிந்த, கல் பொரு சீறடி, |
|
| கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ, |
|
| விலங்கு மலைத்து அமர்ந்தா சேயரி நாட்டத்து, |
45 |
| இலங்கு வளை, விறலியர் நிற் புறம் சுற்ற |
|
| கயம் புக்கன்ன பயம் படு தண் நிழல், |
|
| புனல் கால் கழீஇய மணல் வார் புறவில், |
|
| புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி, |
|
| கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ! |
50 |
'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல்
|
|
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் |
|
| மீமிசை நல் யாறு கடல் படர்ந்தாஅங்கு, |
|
| யாம் அவண் நின்றும் வருதும்; நீயிரும், |
|
| கனி பொழி கானம் கிளையொடு உணீஇய, |
|
| துனை பறை நிவக்கும் புள்ளினம் மான, |
55 |
| புனை தார்ப் பொலிந்த வண்டு படு மார்பின், |
|
| வனை புனை எழில் முலை வாங்கு அமைத் திரள் தோள் |
|
| மலர் போல் மழைக் கண் மங்கையர், கணவன்; |
|
| முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின், |
|
| இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்குப் |
60 |
| புது நிறை வந்த புனல் அம் சாயல், |
|
| மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி, |
|
| வில் நவில் தடக் கை, மே வரும் பெரும் பூண், |
|
| நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு, |
|
| உள்ளினிர் சேறிர் ஆயின், பொழுது எதிர்ந்த |
65 |
| புள்ளினிர் மன்ற, எற்றாக் குறுகுதலின் |
|
கூத்தன் தான் கூறப் போகும்
செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்
| |
ஆற்றின் அளவும், அசையும் நல் புலமும், |
|
| வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும், |
|
| மலையும், சோலையும், மா புகல் கானமும், |
|
| தொலையா நல் இசை உலகமொடு நிற்ப, |
70 |
| பலர் புறம் கண்டு, அவர் அருங் கலம் தரீஇ, |
|
| புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும், |
|
| இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும், புகழுநர்க்கு |
|
| அரசு முழுது கொடுப்பினும், அமரா நோக்கமொடு, |
|
| தூத் துளி பொழிந்த பொய்யா வானின், |
75 |
| வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும், |
|
| நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து, |
|
| வல்லார் ஆயினும் புறம் மறைத்து, சென்றோரைச் |
|
| சொல்லிக் காட்டி, சோர்வு இன்றி விளக்கி, |
|
| நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும், |
80 |
| நீர் அகம் பனிக்கும் அஞ்சு வரு கடுந் திறல், |
|
| பேர் இசை நவிரம் மேஎய் உறையும், |
|
| காரி உண்டிக் கடவுளது இயற்கையும், |
|
| பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும் |
|
| ஞாயிறு அன்ன, அவன் வசை இல் சிறப்பும், |
85 |
| இகந்தன ஆயினும், தெவ்வர் தேஎம் |
|
| நுகம் படக் கடந்து, நூழிலாட்டி, |
|
| புரைத் தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்குக் |
|
| கொடைக் கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும், |
|
| இரை தேர்ந்து இவரும் கொடுந் தாள் முதலையொடு |
90 |
| திரை படக் குழிந்த கல் அகழ் கிடங்கின், |
|
| வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி, |
|
| உரை
செல வெறுத்த அவன் மூதூர் மாலையும், |
|
| கேள் இனி, வேளை நீ முன்னிய திசையே: |
|
வழியினது நன்மையின் அளவு கூறுதல்
|
|
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின், |
95 |
| புகுவது வந்தன்று; இது அதன் பண்பே: |
|
| வானம் மின்னு வசிவு பொழிய, ஆனாது |
|
| இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய, |
|
| பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து, |
|
| அகல் இரு விசும்பின் ஆஅல் போல, |
100 |
| வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை; |
|
| நீலத்து அன்ன விதைப் புன மருங்கில், |
|
| மகுளி பாயாது மலி துளி தழாலின், |
|
| அகளத்து அன்ன நிறை சுனைப் புறவின், |
|
| கௌவை போகிய கருங் காய் பிடி ஏழ் |
105 |
| நெய் கொள ஒழுகின, பல் கவர் ஈர் எண்; |
|
| பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப, |
|
| கொய் பதம் உற்றன, குலவுக் குரல் ஏனல்; |
|
| விளை தயிர்ப் பிதிர்வின் வீ உக்கு, இருவிதொறும், |
|
| குளிர் புரை கொடுங் காய் கொண்டன, அவரை; |
110 |
| மேதி அன்ன கல் பிறங்கு இயவின், |
|
| வாதி கை அன்ன கவைக் கதிர் இறைஞ்சி, |
|
| இரும்பு கவர்வுற்றன, பெரும் புன வரகே; |
|
| பால் வார்பு கெழீஇ, பல் கவர் வளி போழ்பு, |
|
| வாலிதின் விளைந்தன, ஐவன வெண்ணெல்; |
115 |
| வேல் ஈண்டு தொழுதி இரிவுற்றென்ன, |
|
| கால் உறு துவைப்பின், கவிழ்க் கனைத்து, இறைஞ்சி, |
|
| குறை அறை வாரா நிவப்பின், அறை உற்று, |
|
| ஆலைக்கு அலமரும், தீம் கழைக் கரும்பே; |
|
| புயல் புனிறு போகிய, பூ மலி புறவின், |
120 |
| அவல் பதம் கொண்டன, அம் பொதித் தோரை; |
|
| தொய்யாது வித்திய துளர் படு துடவை |
|
| ஐயவி அமன்ற; வெண் கால் செறுவில், |
|
| மை என விரிந்தன, நீள் நறு நெய்தல்; |
|
| செய்யாப் பாவை வளர்ந்து, கவின் முற்றி, |
125 |
| காயம் கொண்டன, இஞ்சி; மா இருந்து, |
|
| வயவுப் பிடி முழந் தாள் கடுப்ப, குழிதொறும், |
|
| விழுமிதின் வீழ்ந்தன, கொழுங் கொடிக் கவலை; |
|
| காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்தென, |
|
| ஊழ் மலர் ஒழி முகை உயர்முகம் தோய, |
130 |
| துறுகல் சுற்றிய சோலை வாழை, |
|
| இறுகு குலை முறுகப் பழுத்த; பயம் புக்கு |
|
| ஊழ் உற்று அலமரும், உந்தூழ்; அகல் அறை, |
|
| காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின், |
|
| காலின் உதிர்ந்தன, கருங் கனி நாவல்; |
135 |
| மாறு கொள ஒழுகின, ஊறு நீர் உயவை; |
|
| நூறொடு குழீஇயின, கூவை; சேறு சிறந்து, |
|
| உண்ணுநர்த் தடுத்தன, தேமா; புண் அரிந்து, |
|
| அரலை உக்கன, நெடுந் தாள் ஆசினி; |
|
| விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப, |
140 |
| குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்து, |
|
| கீழும் மேலும், கார் வாய்த்து எதிரி, |
|
| சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி, |
|
| முரஞ்சு கொண்டு இறைஞ்சின, அலங்கு சினைப் பலவே: |
|
கானவர் குடியின் இயல்பு
| |
தீயின் அன்ன ஒண் செங் காந்தள் |
145 |
| தூவல் கலித்த புது முகை ஊன் செத்து, |
|
| அறியாது எடுத்த புன் புறச் சேவல், |
|
| ஊஉன் அன்மையின், உண்ணாது உகுத்தென, |
|
| நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய், |
|
| வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும் |
150 |
| மண இல் கமழும் மா மலைச் சாரல், |
|
| தேனினர், கிழங்கினர், ஊன் ஆர் வட்டியர், |
|
| சிறு கண் பன்றிப் பழுதுளி போக்கி, |
|
| பொருது தொலை யானைக் கோடு சீர் ஆக, |
|
| தூவொடு மலிந்த காய கானவர் |
155 |
| செழும் பல் யாணர்ச் சிறுகுடிப் படினே, |
|
| இரும் பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர் |
|
வழியிலுள்ள சிற்றூர்களில் நிகழும் விருந்து
|
|
அன்று, அவண் அசைஇ, அற் சேர்ந்து அல்கி, |
|
| கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து, |
|
| சேந்த செயலைச் செப்பம் போகி, |
160 |
| அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச் |
|
| சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி, |
|
| 'நோனாச் செருவின் வலம் படு நோன் தாள் |
|
| மான விறல் வேள் வயிரியம்' எனினே, |
|
| நும் இல் போல நில்லாது புக்கு, |
165 |
| கிழவிர் போலக் கேளாது கெழீஇ, |
|
| சேட் புலம்பு அகல இனிய கூறி, |
|
| பரூஉக் குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு |
|
| குரூஉக் கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் |
|
நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள்
|
|
ஏறித் தரூஉம் இலங்கு மலைத் தாரமொடு, |
170 |
| வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல் |
|
| குறைவு இன்று பருகி, நறவு மகிழ்ந்து, வைகறை, |
|
| பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர, |
|
| அருவி தந்த பழம் சிதை வெண் காழ், |
|
| வரு விசை தவிர்த்த கட மான் கொழுங் குறை, |
175 |
| முளவுமாத் தொலைச்சிய பைந் நிணப் பிளவை, |
|
| பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ, |
|
| வெண் புடைக் கொண்ட துய்த் தலைப் பழனின் |
|
| இன் புளிக் கலந்து மா மோர் ஆக, |
|
| கழை வளர் நெல்லின் அரி, உலை ஊழ்த்து, |
180 |
| வழை அமை சாரல் கமழத் துழைஇ, |
|
| நறு மலர் அணிந்த நாறு இரு முச்சிக் |
|
| குறமகள், ஆக்கிய வால் அவிழ் வல்சி, |
|
| அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ, |
|
| மக முறை தடுப்ப, மனைதொறும் பெறுகுவிர் |
185 |
மலைநாட்டில் நெடுநாள் தங்காது,
நிலநாட்டில் செல்ல வேண்டுதல்
| |
செருச் செய் முன்பின் குருசில் முன்னிய |
|
| பரிசில் மறப்ப, நீடலும் உரியிர் |
|
| அனையது அன்று அவன் மலைமிசை நாடே |
|
| நிரை இதழ்க் குவளைக் கடி வீ தொடினும், |
|
| வரை அரமகளிர் இருக்கை காணினும், |
190 |
| உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்; | |
| பல நாள் நில்லாது, நில நாடு படர்மின் | |
வழியின் அருமை எடுத்துரைத்தல்
| |
|
'பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும்' எனல்
|
விளை புனம் நிழத்தலின், கேழல் அஞ்சி, | |
| புழைதொறும் மாட்டிய இருங் கல் அடாஅர் | |
| அரும் பொறி உடைய, ஆறே; நள் இருள் | 195 |
| அலரி விரிந்த விடியல், வைகினிர், கழிமின் | |
பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை
| |
நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின், | |
| முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில், | |
| கரந்து, பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே; | |
| குறிக் கொண்டு, மரம் கொட்டி, நோக்கி, | 200 |
| செறி தொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச, | |
| வறிது நெறி ஒரீஇ, வலம் செயாக் கழிமின் | |
கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம்
| |
புலந்து, புனிறு போகிய புனம் சூழ் குறவர், | |
| உயர்நிலை இதணம் ஏறி, கை புடையூஉ, | |
| அகல் மலை இறும்பில் துவன்றிய யானைப் | 205 |
| பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடுங் கல் | |
| இரு வெதிர் ஈர்ங் கழை தத்தி, கல்லெனக் | |
| கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய | |
| உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன: | |
| வரும், விசை தவிராது; மரம் மறையாக் கழிமின் | 210 |
காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல்
| |
உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி, | |
| இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின், | |
| குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர், | |
| அகழ் இழிந்தன்ன, கான் யாற்று நடவை | |
| வழூஉம் மருங்கு உடைய; வழாஅல் ஓம்பி, | 215 |
| பரூஉக் கொடி வலந்த மதலை பற்றி, | |
| துருவின் அன்ன புன் தலை மகாரோடு, | |
| ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின் | |
பாசி படிந்த குளக் கரைகளைக் கடந்து செல்லுதல்
| |
அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல், | |
| விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா, | 220 |
| வழும்பு கண் புதைத்த நுண் நீர்ப் பாசி | |
| அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய; | |
| முழு நெறி பிணங்கிய நுண் கோல் வேரலொடு | |
| எருவை மென் கோல் கொண்டனிர் கழிமின் | |
காரி உண்டிக் கடவுளைத் தொழுதல்
| |
உயர் நிலை மாக் கல், புகர் முகம் புதைய, | 225 |
| மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங் கணை, | |
| தாரொடு பொலிந்த, வினை நவில் யானைச் | |
| சூழியின் பொலிந்த, சுடர்ப் பூ இலஞ்சி, | |
| ஓர் யாற்று இயவின், மூத்த புரிசைப் | |
| பராவு அரு மரபின் கடவுள் காணின், | 230 |
| தொழா நிர் கழியின் அல்லது, வறிது | |
| நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி | |
| மாரி தலையும், அவன் மல்லல் வெற்பே | |
மலைக் காட்சிகளில் ஈடுபடின், வழி தப்பும் என்று அறிவுறுத்தல்
| |
அலகை அன்ன வெள் வேர்ப் பீலிக் | |
| கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்; | 235 |
| கடும் பறைக் கோடியர் மகாஅர் அன்ன, | |
| நெடுங் கழைக் கொம்பர், கடுவன் உகளினும்; | |
| நேர் கொள் நெடு வரை, நேமியின் தொடுத்த, | |
| சூர் புகல் அடுக்கத்து, பிரசம் காணினும், | |
| ஞெரேரென நோக்கல், ஓம்புமின், உரித்தன்று; | 240 |
| நிரை செலல் மெல் அடி நெறி மாறு படுகுவிர் | |
இரவில் குகைகளில் தங்குதல்
| |
வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே, | |
| கழுதில் சேணோன் ஏவோடு போகி, | |
| இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி, | |
| நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின், | 245 |
| நெறிக் கெடக் கிடந்த, இரும் பிணர் எருத்தின், | |
| இருள் துணிந்தன்ன ஏனம் காணின், | |
| முளி கழை இழைந்த காடு படு தீயின் | |
| நளி புகை கமழாது, இறாயினிர் மிசைந்து; | |
| துகள் அறத் துணிந்த மணி மருள் தெள் நீர், | 250 |
| குவளை அம் பைஞ் சுனை, அசைவு விடப் பருகி; | |
| மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக் கண் பொதியினிர், | |
| புள் கை போகிய புன் தலை மகாரோடு | |
| அற்கு, இடை கழிதல் ஓம்பி, ஆற்ற, நும் | |
| இல் புக்கன்ன, கல் அளை வதிமின் | 255 |
விடியற்காலத்தில் செம்மையான
பாதையில் செல்லுமாறு கூறுதல்
|
|
அல் சேர்ந்து அல்கி, அசைதல் ஓம்பி, |
|
| வான்கண் விரிந்த விடியல், ஏற்றெழுந்து, |
|
| கானகப் பட்ட செந் நெறிக் கொண்மின் |
|
வழியில் மேற்கொள்ளவேண்டும் முன் எச்சரிக்கைகள்
|
|
கயம் கண்டன்ன அகன் பை, அம்கண் |
|
| மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும், |
260 |
| துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி, |
|
| இகந்து சேண் கமழும் பூவும், உண்டோர் |
|
| மறந்து அமைகல்லாப் பழனும், ஊழ் இறந்து |
|
| பெரும் பயம் கழியினும், மாந்தர் துன்னார் |
|
| இருங் கால் வீயும், பெரு மரக் குழாமும்; |
265 |
| இடனும் வலனும் நினையினர் நோக்கி, |
|
| குறி அறிந்து, அவைஅவை குறுகாது கழிமின்: |
|
| கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து, |
|
| கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் |
|
| நாடு காண் நனந் தலை மென்மெல அகன்மின் |
270 |
குறவரும் மயங்கும் குன்றத்தில் செய்யவேண்டுவன
| |
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின், |
|
| ஞாயிறு தெறாஅ மாக நனந் தலை, |
|
| தேஎம் மருளும் அமையம் ஆயினும், |
|
| இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் |
|
| குறவரும் மருளும் குன்றத்துப் படினே, |
275 |
| அகன் கண் பாறைத் துவன்றிக் கல்லென |
|
| இயங்கல் ஓம்பி, நும் இயங்கள் தொடுமின்: |
|
வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவிபுரிதல்
|
|
பாடு இன் அருவிப் பயம் கெழு மீமிசை, |
|
| காடு காத்து உறையும் கானவர் உளரே; |
|
| நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள் |
280 |
| புனல் படு பூசலின், விரைந்து வல் எய்தி, |
|
| உண்டற்கு இனிய பழனும், கண்டோர் |
|
| மலைதற்கு இனிய பூவும், காட்டி, |
|
| ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற, |
|
| நும்மின், நெஞ்சத்து அவலம் வீட, |
285 |
| இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்: |
|
| அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு, |
|
| குறியவும் நெடியவும் ஊழ் இழிபு, புதுவோர் |
|
| நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து, |
|
| அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின், |
290 |
| பல திறம் பெயர்பவை கேட்குவிர்மாதோ |
|
மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல்
|
|
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின், |
|
| மலை முழுதும் கமழும் மாதிரம்தோறும், |
|
| அருவி நுகரும் வான்அர மகளிர், |
|
| வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும், |
295 |
| தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை; |
|
| இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல், |
|
| விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் |
|
| புலம் புக்கு உண்ணும், புரி வளைப் பூசல்; |
|
| சேய் அளைப் பள்ளி, எஃகு உறு முள்ளின் |
300 |
| எய் தெற, இழுக்கிய கானவர் அழுகை; |
|
| கொடுவரி பாய்ந்தென, கொழுநர் மார்பில், |
|
| நெடு வசி விழுப் புண் தணிமார், காப்பு என, |
|
| அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்; |
|
| தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை |
305 |
| மலைமார், இடூஉம் ஏமப் பூசல்: |
|
| கன்று அரைப்பட்ட கயந் தலை மடப் பிடி |
|
| வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின், |
|
| ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, கிளையொடு, |
|
| நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்; |
310 |
| கைக் கோள் மறந்த கரு விரல் மந்தி |
|
| அரு விடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு, |
|
| முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றி, |
|
| சிறுமை உற்ற களையாப் பூசல்; |
|
| கலை கையற்ற காண்பு இன் நெடு வரை, |
315 |
| நிலைபெய்து இட்ட மால்பு நெறி ஆக, |
|
| பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை; |
|
| அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை, |
|
| திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என; |
|
| நறவு நாள் செய்த குறவர் தம் பெண்டிரொடு |
320 |
| மான் தோல் சிறு பறை கறங்கக் கல்லென, |
|
| வான் தோய் மீமிசை அயரும் குரவை; |
|
| நல் எழில் நெடுந் தேர் இயவு வந்தன்ன, |
|
| கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை; |
|
| நெடுஞ் சுழிப்பட்ட கடுங்கண் வேழத்து |
325 |
| உரவுச் சினம் தணித்து, பெரு வெளில் பிணிமார், |
|
| விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை; |
|
| ஒலி கழைத் தட்டை புடையுநர், புனந்தொறும் |
|
| கிளி கடி மகளிர் விளி படு பூசல்; |
|
| இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு, |
330 |
| மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை, |
|
| மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி, |
|
| கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப, |
|
| வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய, |
|
| நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை; |
335 |
| காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி, |
|
| வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் |
|
| உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார், |
|
| கன்று கடாஅ உறுக்கும் மகாஅர் ஓதை; |
|
| மழை கண்டன்ன ஆலைதொறும், ஞெரேரெனக் |
340 |
| கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்; |
|
| தினை குறு மகளிர் இசை படு வள்ளையும், |
|
| சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் |
|
| பன்றிப் பறையும்; குன்றகச் சிலம்பும்; |
|
| என்று இவ் அனைத்தும், இயைந்து ஒருங்கு, ஈண்டி, |
345 |
| அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன், |
|
| அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த |
|
| மலை படு கடாம் மாதிரத்து இயம்ப |
|
நன்னனது மலை வழியில் செல்லும் வகை
|
|
குரூஉக் கண் பிணையல் கோதை மகளிர் |
|
| முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண் |
350 |
| விழவின் அற்று, அவன் வியன் கண் வெற்பே; |
|
| கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும், |
|
| உண்டற்கு இனிய பல பாராட்டியும், |
|
| 'இன்னும் வருவதாக, நமக்கு' எனத் |
|
| தொல் முறை மரபினிர் ஆகி, பல் மாண் |
355 |
| செரு மிக்குப் புகலும் திரு ஆர் மார்பன் |
|
| உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட, |
|
| இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் |
|
| நறுங்கார் அடுக்கத்து, குறிஞ்சி பாடி, |
|
| கைதொழூஉப் பரவி, பழிச்சினிர் கழிமின் |
360 |
குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி
|
|
மை படு மா மலை, பனுவலின் பொங்கி, |
|
| கை தோய்வு அன்ன கார் மழை, தொழுதி, |
|
| தூஉய் அன்ன துவலை துவற்றலின், |
|
| தேஎம் தேறாக் கடும் பரிக் கடும்பொடு, |
|
| காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல், |
365 |
| கூவல் அன்ன விடரகம் புகுமின், |
|
| இருங் கல் இகுப்பத்து இறு வரை சேராது, |
|
| குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து, |
|
| நின்று நோக்கினும் கண் வாள் வௌவும், |
|
| மண் கனை முழவின்தலை, கோல், கொண்டு, |
370 |
| தண்டு கால் ஆக, தளர்தல் ஓம்பி, |
|
| ஊன்றினிர் கழிமின்; ஊறு தவப் பலவே: |
|
| அயில் காய்ந்தன்ன கூர்ங் கல் பாறை, |
|
| வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து, |
|
| கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின் |
375 |
அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்
|
|
உரை
செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு |
|
| புரை தவ உயரிய மழை மருள் பல் தோல், |
|
| அரசு நிலை தளர்க்கும், அருப்பமும் உடைய; |
|
| பின்னியன்ன பிணங்கு அரில் நுழைதொறும், |
|
| முன்னோன் வாங்கிய கடு விசைக் கணைக் கோல் |
380 |
| இன் இசை நல் யாழ்ப் பத்தரும், விசி பிணி |
|
| மண் ஆர் முழவின் கண்ணும், ஓம்பி, |
|
| கை பிணி விடாஅது பைபயக் கழிமின், |
|
| தளி பொழி கானம் தலை தவப் பலவே; |
385 |
| ஒன்னாத் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென, |
|
| நல் வழிக் கொடுத்த நாணுடை மறவர் |
|
| செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட |
|
| கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே; |
|
| இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக, |
390 |
| தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின் |
|
புதியவர்களுக்கு வழி தெரிய,
புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல்
|
|
பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர் |
|
| சந்து நீவிப் புல் முடிந்து இடுமின் |
|
நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள்
|
|
செல்லும் தேஎத்து, பெயர் மருங்கு அறிமார், |
|
| கல் எறிந்து, எழுதிய நல் அரை மராஅத்த |
395 |
| கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை, |
|
| ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர் |
|
| சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே: |
|
| தேம் பாய் கண்ணித் தேர் வீசு கவிகை |
|
| ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே, |
400 |
| மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் |
|
| ஆங்கனம் அற்றே, நம்மனோர்க்கே; |
|
| அசைவுழி அசைஇ, அஞ்சாது கழிமின் |
|
கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம்
|
|
புலி உற, வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி, |
|
| கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து, |
405 |
| சிலை ஒலி வெரீஇய செங் கண் மரை விடை |
|
| தலை இறும்பு கதழும் நாறு கொடிப் புறவின், |
|
| வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த |
|
| வளை ஆன் தீம் பால், மிளை சூழ் கோவலர், |
|
| வளையோர் உவப்ப, தருவனர் சொரிதலின், |
410 |
| பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும் |
|
| புலம்பு சேண் அகல, புதுவிர் ஆகுவிர்; |
|
| பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன, |
|
| தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ, |
|
| கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் |
415 |
| பல் யாட்டு இனம் நிரை எல்லினிர் புகினே, |
|
| பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்; |
|
| துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன, |
|
| மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி, |
|
| தீத் துணை ஆகச் சேந்தனிர் கழிமின் |
420 |
நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை
|
|
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் |
|
| கொடு விற் கூளியர் கூவை காணின், |
|
| படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை, |
|
| கொடியோள் கணவல் படர்ந்திகும் எனினே, |
|
| தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ, |
425 |
| ஓம்புநர் அல்லது, உடற்றுநர் இல்லை; |
|
| ஆங்கு வியம் கொண்மின்; அது அதன் பண்பே |
|
மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல்
|
|
தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும், |
|
| உம்பல் அகைத்த ஒண் முறி யாவும், |
|
| தளிரொடு மிடைந்த காமரு கண்ணி, |
430 |
| திரங்கு மரல் நாரில், பொலியச் சூடி, |
|
| முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென, |
|
| உண்டனிர், ஆடி, கொண்டனிர் கழிமின் |
|
புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல்
|
|
செவ் வீ வேங்கைப் பூவின் அன்ன, |
|
| வேய் கொள் அரிசி, மிதவை சொரிந்த, |
435 |
| சுவல் விளை நெல்லின், அவரை அம் புளிங் கூழ், |
|
| அற்கு, இடை உழந்த நும் வருத்தம் வீட, |
|
| அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய |
|
| புல் வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்; |
|
| பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி |
440 |
| வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை, |
|
| தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக, |
|
| அசையினிர் சேப்பின், அல்கலும் பெறுகுவிர் |
|
| விசையம் கொழித்த பூழி அன்ன, |
|
| உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை: |
445 |
| நொய்ம் மர விறகின் ஞெகிழி மாட்டி, |
|
| பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி, |
|
| புலரி விடியல் புள் ஓர்த்துத் கழிமின் |
|
நன்னனது தண் பணை நாட்டின் தன்மை
| |
புல் அரைக் காஞ்சி, புனல் பொரு புதவின், |
|
| மெல் அவல், இருந்த ஊர்தொறும், நல் யாழ்ப் |
450 |
| பண்ணுப் பெயர்த்தன்ன, காவும், பள்ளியும், |
|
| பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும், |
|
| நன் பல உடைத்து, அவன் தண் பணை நாடே: |
|
உழவர் செய்யும் உபசாரம்
| |
கண்பு மலி பழனம் கமழத் துழைஇ, |
|
| வலையோர் தந்த இருஞ் சுவல் வாளை, |
455 |
| நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில், |
|
| பிடிக் கை அன்ன, செங் கண் வராஅல், |
|
| துடிக் கண் அன்ன, குறையொடு விரைஇ, |
|
| பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர், |
|
| ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த, |
460 |
| விலங்கல் அன்ன, போர் முதல் தொலைஇ, |
|
| வளம் செய் வினைஞர் வல்சி நல்க, |
|
| துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல், |
|
| இளங் கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும், பெறுகுவிர்; |
|
| முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு, |
465 |
| 'வண்டு படக் கமழும் தேம் பாய் கண்ணித் |
|
| திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம்' எனக் |
|
| கண்டோர் மருள, கடும்புடன் அருந்தி, |
|
| எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் |
|
| மருதம் பண்ணி, அசையினிர், கழிமின் |
470 |
சேயாற்றின் கரைவழியே செல்லுதல்
| |
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ, |
|
| செங் கண் எருமை இனம் பிரி ஒருத்தல், |
|
| கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி, |
|
| வனை கலத் திகிரியின் குமிழி சுழலும், |
|
| துனை செலல் தலைவாய், ஓவு இறந்து வரிக்கும், |
475 |
| காணுநர் வயாஅம், கட்கு இன் சேயாற்றின் |
|
| யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின் |
|
நன்னனது மூதூரின் இயல்பு
| |
நிதியம் துஞ்சும், நிவந்து ஓங்கு வரைப்பின், |
|
| பதி எழல் அறியாப் பழங் குடி கெழீஇ, |
|
| வியல் இடம் பெறாஅ விழுப் பெரு நியமத்து, |
480 |
| யாறு எனக் கிடந்த தெருவின், சாறு என, |
|
| இகழுநர் வெரூஉம், கவலை மறுகின், |
|
| கடல் என, கார் என, ஒலிக்கும் சும்மையொடு, |
|
| மலை என, மழை என, மாடம் ஓங்கி, |
|
| துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும், |
485 |
| பனி வார் காவின் பல் வண்டு இமிரும், |
|
| நனி சேய்த்தன்று, அவன் பழ விறல் மூதூர் |
|
மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல்
|
|
பொருந்தாத் தெவ்வர் இருந் தலை துமிய, |
|
| பருந்து படக் கடக்கும் ஒள் வாள் மறவர் |
|
| கருங் கடை எஃகம் சாத்திய புதவின், |
490 |
| அருங் கடி வாயில் அயிராது புகுமின்: |
|
| மன்றில் வதியுநர் சேண் புலப் பரிசிலர், |
|
| 'வெல் போர்ச் சேஎய்ப் பெரு விறல் உள்ளி |
|
| வந்தோர் மன்ற, அளியர் தாம்' என, |
|
| கண்டோர் எல்லாம், அமர்ந்து, இனிதின் நோக்கி, |
495 |
| விருந்து இறை அவர் அவர் எதிர் கொளக் குறுகி, |
|
| பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட |
|
அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம்
|
|
எரி கான்றன்ன பூஞ் சினை மராஅத்து, |
|
| தொழுதி போக வலிந்து அகப்பட்ட |
|
| மட நடை ஆமான், கயமுனிக் குழவி, |
500 |
| ஊமை எண்கின் குடாவடிக் குருளை, |
|
| மீமிசைக் கொண்ட கவர் பரிக் கொடுந் தாள் |
|
| வரை வாழ் வருடை வன் தலை மாத் தகர், |
|
| அரவுக் குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை, |
|
| அளைச் செறி உழுவை கோள் உற வெறுத்த |
505 |
| மடக் கண் மரையான் பெருஞ் செவிக் குழவி, |
|
| அரக்கு விரித்தன்ன செந் நில மருங்கின், |
|
| பரல் தவழ் உடும்பின் கொடுந் தாள் ஏற்றை, |
|
| வரைப் பொலிந்து இயலும் மடக் கண் மஞ்ஞை, |
|
| கானக்கோழி கவர் குரல் சேவல், |
510 |
| கானப் பலவின் முழவு மருள் பெரும் பழம், |
|
| இடிக் கலப்பு அன்ன, நறு வடி மாவின் |
|
| வடிச் சேறு விளைந்த தீம் பழத் தாரம், |
|
| தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி, |
|
| காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை, |
515 |
| பரூஉப் பளிங்கு உதிர்த்த, பல உறு திரு மணி, |
|
| குரூஉப் புலி பொருத புண் கூர் யானை |
|
| முத்துடை மருப்பின் முழு வலி மிகு திரள், |
|
| வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள், |
|
| நாகம், திலகம், நறுங் காழ் ஆரம், |
520 |
| கருங் கொடி மிளகின் காய்த் துணர்ப் பசுங் கறி, |
|
| திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல், |
|
| கான் நிலை எருமைக் கழை பெய் தீம் தயிர், |
|
| நீல் நிற ஓரி பாய்ந்தென, நெடு வரை, |
|
| நேமியின் செல்லும் நெய்க் கண் இறாஅல், |
525 |
| உடம்புணர்பு, தழீஇய ஆசினி, அனைத்தும், |
|
| குட மலைப் பிறந்த தண் பெருங் காவிரி |
|
| கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப, |
|
| நோனாச் செருவின் நெடுங் கடைத் துவன்றி |
|
முற்றத்தில் நின்று விறலியர் நன்னனைப் போற்றுதல்
|
|
வானத்து அன்ன வளம் மலி யானை, |
530 |
| தாது எருத் ததைந்த, முற்றம் முன்னி, |
|
| மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப, |
|
| கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர, |
|
| மருதம் பண்ணிய கருங் கோட்டுச் சீறியாழ் |
|
| நரம்பு மீது இறவாது, உடன் புணர்ந்து ஒன்றி, |
535 |
| கடவது அறிந்த இன் குரல் விறலியர் |
|
| தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது, |
|
| அருந் திறல் கடவுள் பழிச்சிய பின்றை |
|
கூத்தர்கள் நன்னனைப் போற்றுதல்
| |
விருந்தின் பாணி கழிப்பி, 'நீள் மொழிக் |
|
| குன்றா நல் இசைச் சென்றோர் உம்பல், |
540 |
| இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப, |
|
| இடைத் தெரிந்து உணரும், பெரியோர் மாய்ந்தென, |
|
| கொடைக்கடன் இறுத்த செம்மலோய்' என, |
|
| வென்றிப் பல் புகழ் விறலோடு ஏத்தி, |
|
| சென்றது நொடியவும் விடாஅன், |
545 |
நன்னன் கூறும் முகமன் உரை
| |
'நசைதர |
|
| வந்தது சாலும்; வருத்தமும் பெரிது' என, |
|
நாளோலக்கத்திற்கு அழைத்துச் செல்லுதல்
|
|
பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து, |
|
| திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி, |
|
| கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ, |
|
நன்னனது குளிர்ந்த நோக்கம்
| |
'உயர்ந்த கட்டில், உரும்பு இல் சுற்றத்து, |
550 |
| அகன்ற தாயத்து, அஃகிய நுட்பத்து, |
|
| இலம் என மலர்ந்த கையர் ஆகி, |
|
| தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர், |
|
| நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவிக் |
|
| கடுவரல் கலுழிக் கட்கு இன் சேயாற்று |
555 |
| வடு வாழ் எக்கர் மணலினும், பலரே; |
|
| அதனால், புகழொடும் கழிக, நம் வரைந்த நாள்!' என, |
|
| பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு, |
|
| நயந்தனிர் சென்ற நும்மினும், தான் பெரிது, |
|
| உவந்த உள்ளமோடு, அமர்ந்து இனிது நோக்கி, |
560 |
நன்னனது கொடைச் சிறப்பு
| |
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் |
|
| எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ, |
|
| முடுவல் தந்த பைந் நிணத் தடியொடு, |
|
| நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது, |
|
| தலை நாள் அன்ன புகலொடு, வழி சிறந்து |
565 |
| பல நாள் நிற்பினும், பெறுகுவிர்; 'நில்லாது |
|
| செல்வேம் தில்ல, எம் தொல் பதிப் பெயர்ந்து!' என, |
|
| மெல்லெனக் கூறி விடுப்பின், நும்முள் |
|
| தலைவன் தாமரை மலைய, விறலியர் |
|
| சீர் கெழு சிறப்பின் விளங்குஇழை அணிய, |
570 |
| நீர் இயக்கன்ன நிரை செலல் நெடுந் தேர், |
|
| வாரிக் கொள்ளா வரை மருள் வேழம், |
|
| கறங்கு மணி துவைக்கும் ஏறுடைப் பெரு நிரை, |
|
| பொலம் படைப் பொலிந்த கொய் சுவல் புரவி, |
|
| நிலம் தினக் கிடந்த நிதியமோடு, அனைத்தும், |
575 |
| இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறைய, |
|
| கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கையின் |
|
| வளம் பிழைப்பு அறியாது, வாய் வளம் பழுநி, |
|
| கழை வளர் நவிரத்து மீமிசை, ஞெரேரென |
|
| மழை சுரந்தன்ன ஈகை நல்கி, |
580 |
| தலை நாள் விடுக்கும் பரிசில் மலை நீர் |
|
| வென்று எழு கொடியின் தோன்றும் |
|
| குன்று சூழ் இருக்கை நாடுகிழவோனே |
|
| இதன் பொருள் |
இரணிய முட்டத்துப்
பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்பல் குன்றக்
கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன்சேய் நன்னனைப் பாடியது.
|
மலைபடுகடாம் முற்றும்
|
தனிப் பாடல் |
தூஉஉத் தீம் புகை தொல் விசும்பு போர்த்ததுகொல்? |
| பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்? |
| மாஅ மிசையான் கோன் நன்னன் நறு நுதலார் |
| மாஅமை எல்லாம் பசப்பு!
|