முகப்பு |
காவன்முல்லைப் பூதனார் |
274. பாலை |
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ, |
||
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து, |
||
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள் |
||
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம் |
||
5 |
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம், |
|
'எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?' எனக் |
||
கூறின்றும் உடையரோ மற்றே-வேறுபட்டு |
||
இரும் புலி வழங்கும் சோலை, |
||
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே? | உரை | |
தோழி பருவம் மாறுபட்டது.-காவன் முல்லைப் பூதனார்
|