முகப்பு |
மதுரைப் பேராலவாயர் |
361. முல்லை |
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி |
||
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்; |
||
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா, |
||
படு மழை பொழிந்த தண் நறும் புறவில், |
||
5 |
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப, |
|
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த் |
||
தந்தன நெடுந்தகை தேரே; என்றும் |
||
அரும் படர் அகல நீக்கி, |
||
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே. | உரை | |
வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.-மதுரைப் பேராலவாயர்
|