முகப்பு |
அரிகால் மாறிய |
210. மருதம் |
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் |
||
மறு கால் உழுத ஈரச் செறுவின், |
||
வித்தொடு சென்ற வட்டி பற்பல |
||
மீனொடு பெயரும் யாணர் ஊர! |
||
5 |
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் |
|
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே; |
||
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் |
||
புன்கண் அஞ்சும் பண்பின் |
||
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே. | உரை | |
தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய், வாயில் நேர்ந்தது.-மிளைகிழான் நல்வேட்டனார்
|