முகப்பு |
உருத்திரன் |
274. பாலை |
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து |
||
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர, |
||
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு, |
||
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் |
||
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் |
||
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு |
||
மணி மிடை அல்குல் மடந்தை |
||
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே. |
உரை | |
பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - உருத்திரன் |