முகப்பு |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் |
133. குறிஞ்சி |
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை |
||
கிளி குறைத்து உண்ட கூழை இருவி |
||
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என் |
||
உரம் செத்தும் உளெனே-தோழி!-என் |
||
நலம் புதிது உண்ட புலம்பினானே. |
உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகண்ணன் சாத்தன் |