கல்பொரு சிறுநுரையார்

290. நெய்தல்
'காமம் தாங்குமதி' என்போர்தாம் அஃது
அறியலர்கொல்லோ? அனை மதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம்ஆயின்,
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க்
கல் பொரு சிறு நுரை போல,
மெல்லமெல்ல இல்லாகுதுமே.

உரை

வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது. - கல்பொருசிறுநுரையார்.