முகப்பு |
கல்லாடனார் |
260. பாலை |
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் |
||
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; |
||
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; |
||
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் |
||
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை |
||
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, |
||
கன்று இல் ஓர் ஆ விலங்கிய |
||
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. |
உரை | |
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார். |
269. நெய்தல் |
சேயாறு சென்று, துனைபரி அசாவாது, |
||
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல- |
||
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் |
||
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் |
||
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய |
||
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், |
||
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, |
||
'இனி வரின் எளியள்' என்னும் தூதே. |
உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது - கல்லாடனார் |