முகப்பு |
கொற்றனார் |
218.பாலை |
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக் |
||
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்; |
||
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்; |
||
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!- |
||
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று |
||
இமைப்பு வரை அமையா நம் வயின் |
||
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே. |
உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கொற்றன் |
358. மருதம் |
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே |
||
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச் |
||
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க |
||
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்: |
||
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் |
||
பல் ஆன் கோவலர் கண்ணிச் |
||
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே. |
உரை | |
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன் |