முகப்பு |
தங்கால் முடக்கொல்லனார் |
217. குறிஞ்சி |
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்; |
||
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்; |
||
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?' என |
||
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து, |
||
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற; |
||
ஐதேய் கம்ம யானே; |
||
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே. |
உரை | |
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. - தங்கால் முடக்கொல்லனார் |