முகப்பு |
நம்பிகுட்டுவன் |
109. நெய்தல் |
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை |
||
புணரி இகுதிரை தரூஉம் துறைவன் |
||
புணரிய இருந்த ஞான்றும், |
||
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே! |
உரை | |
தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது. - நம்பி குட்டுவன் |
243. நெய்தல் |
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் |
||
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி, |
||
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
||
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை |
||
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே. |
உரை | |
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது. - நம்பி குட்டுவன் |