முகப்பு |
வருமுலையாரித்தி |
176. குறிஞ்சி |
ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்; |
||
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என் |
||
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை, |
||
வரை முதிர் தேனின் போகியோனே- |
||
ஆசு ஆகு எந்தை-யாண்டு உளன்கொல்லோ? |
||
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த |
||
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே. |
உரை | |
தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது. - வருமுலையாரித்தி |