முகப்பு |
அகுதை |
298. குறிஞ்சி |
சேரி சேர மெல்ல வந்துவந்து, |
||
அரிது வாய்விட்டு இனிய கூறி, |
||
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன் |
||
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!- |
||
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை |
||
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர் |
||
மடப் பிடிப் பரிசில் மானப் |
||
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே. |
உரை | |
கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது. - பரணர் |