முகப்பு |
தொண்டையார் |
260. பாலை |
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் |
||
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; |
||
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; |
||
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் |
||
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை |
||
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, |
||
கன்று இல் ஓர் ஆ விலங்கிய |
||
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. | உரை | |
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார். |