முகப்பு |
அடும்பின் ஆய் மலர் |
401. நெய்தல் |
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல் |
||
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் |
||
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு |
||
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கு விளையாடலும் கடிந்தன்று, |
||
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே! |
உரை | |
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன் |
||