முகப்பு |
அடும்பு அவிழ் அணி |
349. நெய்தல் |
'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி, |
||
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த் |
||
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம் |
||
கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்; |
||
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய |
||
கொடுத்து 'அவை தா' எனக் கூறலின், |
||
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே? |
உரை | |
பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன். |