முகப்பு |
அம்சில் ஓதி |
211. பாலை |
அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ |
||
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் |
||
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது |
||
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை |
||
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி, |
||
ஆராது பெயரும் தும்பி |
||
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே. |
உரை | |
'இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?'எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் |