முகப்பு |
அம்ம வாழி தோழி நூல் அறு |
104. பாலை |
அம்ம வாழி, தோழி! காதலர், |
||
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப, |
||
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும் |
||
பனி படு நாளே, பிரிந்தனர்; |
||
பிரியும் நாளும் பல ஆகுபவே! |
உரை | |
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது; 'சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?' என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம். - காவன்முல்லைப் பூதனார். |