முகப்பு |
அயிரை பரந்த |
178. மருதம் |
அயிரை பரந்த அம் தண் பழனத்து |
||
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் |
||
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள் |
||
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்; |
||
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு |
||
அரியம் ஆகிய காலைப் |
||
பெரிய நோன்றனிர்; நோகோ யானே. |
உரை | |
கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது. - நெதும்பல்லியத்தை |