முகப்பு |
அல்குறு பொழுதில் |
273. பாலை |
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப் |
||
பெருங் காடு உளரும் அசைவளி போல, |
||
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே! |
||
நொந்தனஆயின், கண்டது மொழிவல்; |
||
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு |
||
அறியாது ஏறிய மடவோன் போல, |
||
ஏமாந்தன்று, இவ் உலகம்; |
||
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே. |
உரை | |
'பிரிவர்' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- சிறைக்குடி ஆந்தையார் |