முகப்பு |
அலர் யாங்கு ஒழிவ |
311. நெய்தல் |
அலர் யாங்கு ஒழிவ-தோழி!-பெருங் கடல் |
||
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும், |
||
நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர் |
||
யான் கண்டன்றோஇலனே; பானாள் |
||
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத் |
||
தாது சேர் நிகர்மலர் கொய்யும் |
||
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே? |
உரை | |
அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - சேந்தன்கீரன் |