முகப்பு |
அவரே கேடு இல் |
216. பாலை |
அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை |
||
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே; |
||
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும் |
||
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே; |
||
'அன்னள் அளியள்' என்னாது, மா மழை |
||
இன்னும் பெய்யும்; முழங்கி |
||
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன |