முகப்பு |
அழியல் ஆயிழை |
143. குறிஞ்சி |
அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்; |
||
பழியும் அஞ்சும், பய மலை நாடன்; |
||
நில்லாமையே நிலையிற்று ஆகலின், |
||
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின் |
||
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத் |
||
தங்குதற்கு உரியது அன்று, நின் |
||
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே. |
உரை | |
வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.- மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன். |