முகப்பு |
ஆர்கலி ஏற்றொடு |
186. முல்லை |
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த |
||
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி |
||
எயிறு என முகையும் நாடற்குத் |
||
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே, |
உரை | |
பருவ வரவின், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி. |