முகப்பு |
இது மற்று...துனியிடை |
181. குறிஞ்சி |
இது மற்று எவனோ-தோழி!-துனியிடை |
||
இன்னர் என்னும் இன்னாக் கிளவி- |
||
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான் |
||
உழவன் யாத்த குழவியின் அகலாது, |
||
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் |
||
திரு மனைப் பல் கடம் பூண்ட |
||
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே? |
உரை | |
தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - கிள்ளிமங்கலங்கிழார் |